ஓட்டுக்கு திமுக தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்; அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று கோவை- மேட்டுபாளையத்தில், பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இப்பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஓட்டுக்கு திமுகவினர் கொடுக்கும் பணம் கஞ்சா மூலம் வந்த பணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இம்முறை திமுக காரர்கள் யாராவது தன்னுடைய பாக்கெடிலிருந்து ஓட்டிற்குப்பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சிப் போகிற பணம் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று கோவையில் நடந்த பாஜக பிரசாரப் போதுக்கூட்டத்தில் அவர் கூறினார்.