Home » Archives by category » உலகம் (Page 2)

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதிர்ச்சியில் மார்க்!

Comments Off on ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதிர்ச்சியில் மார்க்!

திடீரென நேற்றிரவு சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதால் உலகம் முழுதும் உள்ள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர். டுவிட்டர் உள்ளிட்ட மற்ற அனைத்து சமூக வலைதளங்களும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இயங்கியது. மார்க் அவர்களுக்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் திடீரென ஏன் முடங்கியது. சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கியது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒரு மணி […]

Continue reading …

கருக்கலைப்பு உரிமை சட்டத்தை நிறைவேற்றிய பிரான்ஸ்!

Comments Off on கருக்கலைப்பு உரிமை சட்டத்தை நிறைவேற்றிய பிரான்ஸ்!

பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 1975ம் ஆண்டு முதல் பிரான்ஸில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக உள்ளது. கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றும் வகையில் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை பதிவு செய்த நாடாக பிரான்ஸ் […]

Continue reading …

துபாய் வாழ் தமிழர்களின் சாதனை நிகழ்ச்சி!

Comments Off on துபாய் வாழ் தமிழர்களின் சாதனை நிகழ்ச்சி!

துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி நடத்திய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்துள்ளனர். நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் தமிழ் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், பலரும் தங்களைச் சிறந்த பாடகர்களாக உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி […]

Continue reading …

உணவுக்காக காத்திருந்த பொதுமக்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்!

Comments Off on உணவுக்காக காத்திருந்த பொதுமக்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்!

ஈவு இருக்கமின்றி கண்மூடித்தனமாக தெருவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போரில் இஸ்ரேலியர்கள் […]

Continue reading …

டீக்கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்!

Comments Off on டீக்கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்!

உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் நாக்பூர் அருகே சாலையோர டீக்கடையில் டீ குடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த டீக்கடைக்காரர் பில்கேட்ஸ் யார் என்றே தெரியாமல் அவருக்கு டீ வழங்கினாராம். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது நாக்பூர் சாலையோர டீக்கடை அருகே திடீரென காரை […]

Continue reading …

ரிலையன்ஸுடன் இணைந்த வால்ட் டிஸ்னி!

Comments Off on ரிலையன்ஸுடன் இணைந்த வால்ட் டிஸ்னி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் உலக பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது இந்திய ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உள்ளிட்ட சேவைகளில் ஒன்றிணைகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல வகையான தொழில்களை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Viacom 18 இந்தியா முழுவதிற்கும் செய்தி சேனல்கள், எண்டெர்டியின்மெண்ட், ஸ்போர்ட்ஸ் சேனல்களை வழங்கி […]

Continue reading …

விண்வெளிக்கு செல்லும் தமிழக வீரர்!

Comments Off on விண்வெளிக்கு செல்லும் தமிழக வீரர்!

தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணன் இஸ்ரோவிலிருந்து முதன்முறையாக ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம், நிலவிற்கு சந்திரயான், செவ்வாய்க்கு மங்கள்யான் என பல விண்கலன்களை விண்ணில் ஏவி வல்லரசு நாடுகளுக்கு நிகரான முயற்சிகளை குறைந்த பொருட்செலவில் செய்து காட்டியுள்ளது. அவ்வகையில் இந்தியாவிலிருந்து இஸ்ரோ மூலமாக முதன்முறையாக விண்வெளிக்கு இந்திய […]

Continue reading …

சோனி நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை!

Comments Off on சோனி நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை!

சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் மீண்டும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் வரிசையில் தற்போது சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் பிரிவில் உள்ள 900 பேர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பணி நீக்க நடவடிக்கையை எடுத்தது. அதனால் ஆயிரம் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தற்போது […]

Continue reading …

நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம்!

Comments Off on நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம்!

இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை போக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அதன் ஒடிசியஸ் ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது. விண்கலம் தற்காலிகமாக செயலிழந்ததை கண்டுபிடிக்க சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்நிறுவனம் […]

Continue reading …

காசாவில் 29 ஆயிரத்தை தாண்டிய பலி!

Comments Off on காசாவில் 29 ஆயிரத்தை தாண்டிய பலி!

காசா மக்கள் இஸ்ரேல் தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போர் காரணமாக உணவு, தண்ணீர், மருந்து போன்றவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியினை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை […]

Continue reading …