புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவரது இல்லத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம், “புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழுவினர் 130 பேர் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் 12 கேள்விகள் அடங்கிய படிவம் கொடுக்கப்பட்டது.தமிழக தேர்தல் கள நிலவரம் குறித்து எழுத்து பூர்வமாக பெறப்பட்டது. அத்துடன், தொடர்ந்து ஒவ்வொருவருடைய கள அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. […]
Continue reading …டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி வழங்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் மற்றும் பெருவெள்ள பாதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்தன. இதனை தேசிய பேரிடராக அறிவித்து சுமார் 37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை […]
Continue reading …திமுகவினர் கிளாம்பாக்கம் மக்களுக்கு அல்வா கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுகவினர் மத்திய அரசு அளிக்கும் நிதி பகிர்வு மிகவும் குறைந்ததாக இருக்கிறது. தமிழகத்திலிருந்து அளிக்கும் வருமானத்தில் பெருமளவு மத்திய அரசு எடுத்துக் கொண்டு சிறிய அளவே நம் மாநிலத்திற்கு தந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசை வஞ்சிக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, ஆ ராசா நாடாளுமன்றத்தில் பேசினர். மத்திய அரசு அளிக்கும் நிதி […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா? ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு […]
Continue reading …புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால்தான் […]
Continue reading …சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் வருகையை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை வெளியிட்டு உறுதிபடுத்தினார். அதற்கான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின் தனது 69வது படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து சக நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் […]
Continue reading …அதிமுக கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிவதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநில, தேசிய கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிக்காக தயாராகி வருகின்றன. ஆனால் இந்த பேச்சுக்கள் தொடங்கும் முன்னதாகவே முந்தைய நாடாளுமன்ற தேர்தல் முதலாக கூட்டணியிலிருந்து வந்த பாஜக மற்றும் அதிமுகவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜகவின் தலைமையே எனவும் பேசிக் கொள்ளப்பட்டது. தற்போது பாஜக […]
Continue reading …டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் வரிப் பகிர்வுக் கொள்கைகளை எதிர்த்து கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. கடந்த ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சமமான நிதி பகிர்வு இல்லை என்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கிய அறிவிப்புகள் எதுவுமே இடம்பெறவில்லை எனவும் கர்நாடகா குற்றம் சாட்டியிருந்தது. இதை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. டில்லி ஜந்தர் மந்தரியில் நடைபெற்ற […]
Continue reading …மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில், “கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. 2019 நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மனிதநேய மக்கள் கட்சி அரும்பாடுபட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பாபநாசம், […]
Continue reading …அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் […]
Continue reading …