முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமாரும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் […]
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக அதிமுக உறுதி அளித்துள்ளதாகவும், வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி, பின் பிரேமலதாவுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “அதிமுக கூட்டணி சார்பில் மார்ச் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதிமுக சார்பில் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் அறிவித்தார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் […]
Continue reading …தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது. இதற்கிடையே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் […]
Continue reading …பாமக அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. திடீரென பாஜக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சென்னையில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் எல் முருகன் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் ரகசியமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக எந்த கூட்டணியில் சேர இருக்கிறது என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு […]
Continue reading …அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக, தற்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. தேமுதிகவில் தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த முறை மாநிலங்களவை சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். […]
Continue reading …எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் அக்கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அவரை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து வரவேற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்பி சற்குண பாண்டியனின் மகள் சிம்லா முத்து […]
Continue reading …நாளை மக்களவை தேர்தலை ஒட்டி அதிமுக தேமுதிக இடையே கூட்டணிக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு, கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க, அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஏழு […]
Continue reading …அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக பக்கம் வரலாம் என்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகை செல்வன், “அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்களில் நல்ல பதில் தரப்படும். தொகுதி பங்கீடுவதில் காங்கிரஸுடன் திமுகவுக்கு கசப்பு உள்ளது. காங்கிரசுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், […]
Continue reading …கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் மற்றும் நகர் மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். தற்போது அதிமுகவின் இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் திடீரென கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி […]
Continue reading …