நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசுவது திமிர்த்தனம் என்றும் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசினார். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் “420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என […]
Continue reading …தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி நுழைய முடியாது என்றும் வடநாட்டில் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா வலுவாக கால் ஊன்ற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் அபார வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆளும் காங்கிரஸ் […]
Continue reading …லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக கோடிக்கணக்கில் வழங்கிய நிறுவனங்களில் அதிகளவில் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் முறையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை செய்ததுடன், இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்த விவரங்களை சமர்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வகையில் எஸ்பிஐ அளித்த விவரங்கள் தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிகளவில் தேர்தல் நன்கொடை பெற்ற […]
Continue reading …குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பொய்யான செய்திகளை பரப்பும் குணம் திமுகவின் டிஎன்ஏவில் உள்ளது என காட்டமாக பதிவு செய்துள்ளார். சமீபத்தில் குஷ்பு அளித்த பேட்டியில், “1000 ரூபாய் பிச்சை போட்டால் மகளிர்கள் ஓட்டு போட்டு விடுவார்களா?” என திமுகவை கேள்வி எழுப்பினார். இதனால் குஷ்பு மீது கடும் கண்டனங்கள் எழுந்தது. மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறுவதா என திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரது உருவப்படத்தை எரித்து வருகின்றனர். இது குறித்து விளக்கமளித்துள்ள […]
Continue reading …வரவிருக்கும் விரைவில் மக்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக சமீபத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களவை தேர்தல் 2024-க்காக 2ம் கட்ட வேட்பாளர் […]
Continue reading …நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேட்டி ஒன்றில், “தேர்தல் பிரச்சாரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் கூட்டம் வராது. கூட்டத்தை வரவழைப்பதற்கு கமல்ஹாசனை பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் திமுகவிற்கும் இடையே நடந்த உடன்பாட்டில் மக்களவைத் தேர்தலில் கமல் கட்சிக்கு சீட் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் 2025ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு சீட் உண்டு என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் […]
Continue reading …ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இண்டி கூட்டணி பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த நிலையில் அக்கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை அவர் ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. […]
Continue reading …பாமக அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. திடீரென பாஜக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சென்னையில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் எல் முருகன் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் ரகசியமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக எந்த கூட்டணியில் சேர இருக்கிறது என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு […]
Continue reading …அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக, தற்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. தேமுதிகவில் தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த முறை மாநிலங்களவை சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். […]
Continue reading …இந்தியா டிவி கருத்துக்கணிப்பில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் அதேபோல் 100 தொகுதிகளையும் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெறாது என்றும் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதில் இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் […]
Continue reading …