Home » Posts tagged with » Chennai (Page 2)

உள்ளாடையில் தங்கம் கடத்தல்; 2 பெண்கள் கைது!

Comments Off on உள்ளாடையில் தங்கம் கடத்தல்; 2 பெண்கள் கைது!

சட்டவிரோதமாக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது. இன்று இரண்டு பெண்கள் உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தியதாக சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாடை, சூட்கேஸில் ரகசிய அறை அமைத்து துபாயில் இருந்து 10.3 கிலோ தங்கம் கடத்திய இரண்டு பெண்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் துபாய் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பினர். இருவரையும் சந்தேகப்பட்ட சுங்கத்துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அவர்கள் தங்கள் உள்ளாடையிலும், […]

Continue reading …

தாம்பரம் எஸ்.ஐ. கைதில் திடுக்கிடும் தகவல்கள்?

Comments Off on தாம்பரம் எஸ்.ஐ. கைதில் திடுக்கிடும் தகவல்கள்?

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் எஸ்.ஐ. கைதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது. வங்கதேச எல்லையில் கைதான சேலையூர் எஸ்.ஐ ஜான் செல்வராஜ் என்பவர் 7,500 அமெரிக்க டாலர்களுடன் பிடிபட்டுள்ளார், அவரிடம் கட்டுக்கட்டாக இந்திய பணமும் வைத்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் போதைப் பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சேலையூர் எஸ்.ஐ […]

Continue reading …

சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

Comments Off on சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். நாளை 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதை அடுத்து நாளை மற்றும் மார்ச் 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியான அறிவிப்பில், “பெல்ஸ் […]

Continue reading …

‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை மீது போலீசில் புகார்!

Comments Off on ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை மீது போலீசில் புகார்!

“சுந்தரா டிராவல்ஸ்” படத்தில் நடித்த ராதா தனது மகனுடன் சென்று இளைஞரை தாக்கியதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. “சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படத்தில் முரளி மற்றும் வடிவேலுவுடன் நாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருக்கிறார். அவர் தனது மகனுடன் சென்று ரிச்சர்ட்ஸ் என்ற இளைஞரை தாக்கியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிச்சர்ட்ஸ் தந்தை டேவிட் ராஜ் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்புகாரில் எனது மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட்ஸ் என்பவர் கடந்த 14ம் தேதி சாலிகிராமம் சாலை […]

Continue reading …

வெறிச்சோடி காணப்பட்ட தேமுதிக அலுவலகம்!

Comments Off on வெறிச்சோடி காணப்பட்ட தேமுதிக அலுவலகம்!

சமீபத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் ஒருவர் கூட விருப்பமனு கேட்டு வரவில்லை என்பதால் தேமுதிக அலுவலகமே காலியாக உள்ளது. தேமுதிக கட்சி இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை எடுக்க முடியாமல் உள்ளது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் வரும் வியாழக்கிழமை எந்த கூட்டணியில் இணைவது குறித்து அறிவிப்பை […]

Continue reading …

ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!

Comments Off on ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!

ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் சென்னையில் உள்ள 4 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேசமயம் காவல் நிலையங்களை உலகத் தரத்தில் தரம் உயர்த்தும் பணியும் நடைபெறுகிறது. புகாரளிக்க வரும் மனுதாரர்களை இன்முகத்தோடு வரவேற்றல், காவல் நிலைய கட்டுமான அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படுதல், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக வாகன நிறுத்துமிட வசதி […]

Continue reading …

அண்ணாசலையில் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

Comments Off on அண்ணாசலையில் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் இரண்டாம் கட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் ஒரு ஆண்டுக்கு சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி “சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை திரு.வி.க சந்திப்பு வரை […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

மார்ச் 18ம் தேதி வரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு […]

Continue reading …

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!

Comments Off on குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!

கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்திய குற்றவாளி தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என்று வெளியான தகவலை அடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். […]

Continue reading …

சென்னை தனியார் பள்ளிக்கு மீண்டும் குண்டு மிரட்டல்!

Comments Off on சென்னை தனியார் பள்ளிக்கு மீண்டும் குண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முதுல் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளது. இன்று முதல் 11-ம் வகுப்புகளுக்கும் தொடங்க உள்ளது. சென்னை கெருகம்பாக்கதில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்களை வீட்டுக்கு […]

Continue reading …