Home » Posts tagged with » Chennai (Page 3)

சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்று காலையில் சென்னையிலுள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும், பள்ளிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, குறிப்பிட்ட பள்ளிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளை […]

Continue reading …

கூலித்தொழிலாளர்கள் மெட்ரோவில் பயணிக்க தடையா?

Comments Off on கூலித்தொழிலாளர்கள் மெட்ரோவில் பயணிக்க தடையா?

சமூக வலைதளங்களில் சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் பயணம் செய்ய வந்தபோது அவர்கள் தடுக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்தது. இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வேலைக்கான பொருட்களுடன் மெட்ரோ ரயில் பயணம் செய்ய வந்த போது அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இச்செய்தியை அடுத்து மெட்ரோ நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

Continue reading …

அரசு பேருந்தில் ஓட்டை! உயிர் தப்பிய பயணி!

Comments Off on அரசு பேருந்தில் ஓட்டை! உயிர் தப்பிய பயணி!

அரசு பேருந்து சென்னை, அமைந்தகரை அருகே சென்றுக்கொண்டிருந்த போது, பேருந்தில் பலகை உடைந்து பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த பயணி உயிர் தப்பினார். திருவேற்காடு செல்லும் பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து ஒன்று சென்னை அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் இருந்த ஓட்டையை பலகை வைத்து மூடியுள்ளனர். அப்பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பலகை உடைந்து அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். அப்போது அந்த […]

Continue reading …

சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளி கைது!

Comments Off on சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளி கைது!

இன்று திருவான்மியூர் பகுதியில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த யோவான் ஆண்டவர் என்பவரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் சாக்லெட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிககள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாகக் கூறி, 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முக்கிய குற்றாவாளி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த […]

Continue reading …

கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

Comments Off on கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகம்- என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது? கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு […]

Continue reading …

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை?

Comments Off on சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை?

என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினார் இந்த பகுதிகளில் ஊடுருவு இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த சோதனையை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது […]

Continue reading …

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் நுழைய அனுமதி இல்லையா?

Comments Off on ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் நுழைய அனுமதி இல்லையா?

கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெடுஞ்சாலையிலேயே ஆம்னி பேருந்துகள் பயணிகளை இறக்கி விடுகின்றன என்றும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் இதுகுறித்து கூறும்போது, “கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் நிரம்பியவுடன் பேருந்து நிலையத்திற்குள் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே வேறு வழியில்லாமல் நாங்கள் நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகிறோம். இது குறித்து நாங்கள் விரைவில் […]

Continue reading …

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட திமுக மகன் & மருமகள்!

Comments Off on ஆந்திராவில் கைது செய்யப்பட்ட திமுக மகன் & மருமகள்!

பணிப்பெண்ணை சித்திரவதை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆண்டோ வீட்டில், 18 வயது இளம் பெண் ஒருவர், பணிபுரிந்து வந்தார். அப்பெண்ணை ஆண்டோவும், அவரது மனைவி மெரலினாவும் சேர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியும், கைகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்திய […]

Continue reading …

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

Comments Off on கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. விழாவின் தொடக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை […]

Continue reading …

சென்னை வந்தடைந்த பிரதமரை வரவேற்ற அமைச்சர்கள்!

Comments Off on சென்னை வந்தடைந்த பிரதமரை வரவேற்ற அமைச்சர்கள்!

சென்னைக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கடந்த 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த […]

Continue reading …