உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் டெல்லி மாநிலத்தில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,214 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த ஆறு நாளில் பரிசோதனையை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா நிலவரத்தை பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியரோடு அமித்ஷா […]
Continue reading …உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவருடைய குழந்தைகள்கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதனை சமூக வளையதளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், வெளிநோயாளி போல் சிகிச்சை பெற்று வருவதாவும் மற்றும் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
Continue reading …நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன், ஃபிஜி, மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா இந்த ஒன்பது நாடுகளும் கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளன. நியூசிலாந்தில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது கொரோனா இல்லாத நாடாக மாறியது. இதனால் ஏழு வாரங்கள் அமலில் இருந்த ஊரடங்கு தற்போது ரத்து செய்தன. இதை போலவே ஆப்பிரிக்க நாடு தான்சானியாவில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனை அடுத்து சென்ற ஞாயிற்றுக்கிழமையில் […]
Continue reading …திருச்சி, ஜூன் 12 சென்னையில் கொரனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலான விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு தான் வருகின்றன. அப்படி வரும் விமான பயணிகள் கொரனா சோதனைக்கு பின் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்ப படுகிறார்கள். அப்படி அனுப்ப படுவதற்கு முன் ஒவ்வொரு விமான பயணிகளிடமும் போக்குவரத்து துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பெரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்க திருச்சி விமான நிலையம் சென்றோம். […]
Continue reading …சீனாவில் ஆகஸ்ட் மாதமே கொரோனா வைரஸ் இருக்கலாம் என ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி ஆய்வின் மூலம் தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் பரவியதற்கு முக்கியமான இடமாக கூறப்படும் உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளின் கார் பார்க்கிங்கிள் சென்ற ஆகஸ்ட் மாதமே வைரஸ் இருப்பதை சாட்டிலைட் படங்கள் காட்டுகிறது. அதே சமயத்தில் இருமல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை பற்றி இணையத்தில் அதிகமாக தேடல்கள் நடத்தப்பட்டன. இதனால், இந்த ஆய்வு நடைபெற்றது. மேலும், இது அதிகரித்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் கொரோனா […]
Continue reading …உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் மேல் மற்றும் பலியானோர் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அதில் சுமார் மூவாயிரம் காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். கொரோனாவை […]
Continue reading …ஜெ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – செயற்கை சுவாச அளவு குறைப்பு! கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனின் உடல்நிலை இரு தினங்களுக்குப் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன், மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வருவதால் […]
Continue reading …1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த தாதா தாவூத் இப்ராஹிம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளி வருகிறது. தாவூத் இப்ராஹிமின் மனைவியும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கராச்சியில் உள்ள தாவூத் இப்ராஹிமின் வீட்டில் வேலைபார்ப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் முக்கிய அதிகாரி கூறினார் என சி.என்.என் செய்தி வெளியிட்டது. தாவூத் இப்ராஹிம் மீது இந்தியாவில் […]
Continue reading …சென்னை, ஜூன் 3 ஐரோப்பாவின் ஸ்காட்லாந்து நாட்டில் சொகுசுக் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 48 இந்தியர்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தங்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். ஸ்காட்லாந்துக்கும் லண்டனுக்கும் இடையில் சுற்றுலா பயணிகளை […]
Continue reading …இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி 5000 முதல் 8000 வரை அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் முழுதாக பலனளிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு இன்று 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 2,05,045 ஆக உள்ளது. இந்தியாவில் […]
Continue reading …