Home » Posts tagged with » Dmk

பணம் அனுப்பும் அண்ணாமலை! திமுகவினர் பரபரப்பு புகார்!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சார அனுமதி முடிந்த நிலையிலும் போன் மூலமாக பேசி ஓட்டு கேட்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். நாளை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 6 மணியுடன் அனைத்து விதமான பிரச்சாரங்களையும் நிறுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை, […]

திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு!

Comments Off on திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் “மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களுக்கு முன் அனுமதி கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி […]

Continue reading …

திமுக டெபாசிட் இழக்கும்; அண்ணாமலை!

Comments Off on திமுக டெபாசிட் இழக்கும்; அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக டெபாசிட் இழக்கும் முதல் தொகுதி கோவையாகத்தான் இருக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருவருமே அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் மைக்கை […]

Continue reading …

திமுகவை வீட்டுக்கனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும்! பிரதமர் மோடி!

Comments Off on திமுகவை வீட்டுக்கனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும்! பிரதமர் மோடி!

பிரதமர் மோடி திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, எல்.முருகனை ஆதரித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கும் தெளிவாக தெரிகிறது. ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் கோவையில் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் நடவடிக்கையால் கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் காப்பாற்றபட்டுள்ளது.வறுமையில் […]

Continue reading …

ஓட்டுக்கு திமுக தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்; அண்ணாமலை!

Comments Off on ஓட்டுக்கு திமுக தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்; அண்ணாமலை!

விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று கோவை- மேட்டுபாளையத்தில், பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இப்பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஓட்டுக்கு திமுகவினர் கொடுக்கும் பணம் கஞ்சா மூலம் வந்த பணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இம்முறை திமுக காரர்கள் யாராவது தன்னுடைய […]

Continue reading …

முதலமைச்சருக்கு பறந்ததா உளவுத்துறை ரிப்போர்ட்?

Comments Off on முதலமைச்சருக்கு பறந்ததா உளவுத்துறை ரிப்போர்ட்?

உளவுத்துறை தமிழகத்திலுள்ள 8 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இல்லை என்று தமிழக முதலமைச்சருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதையடுத்து முதலமைச்சர் சுதாரித்து அந்த தொகுதிகளுக்கு கூடுதலாக சில அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினாலும் உளவுத்துறை முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள ரகசிய ரிப்போர்ட்டில் […]

Continue reading …

அதிமுகவை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களியுங்கள்; கொமதேக தலைவர் ஈஸ்வரன்!

Comments Off on அதிமுகவை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களியுங்கள்; கொமதேக தலைவர் ஈஸ்வரன்!

கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் “அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் திமுகக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் அவர், “அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். கூட்டணியிலிருந்து வெளியே வருவது போல் எடப்பாடி […]

Continue reading …

அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு!

Comments Off on அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு!

அச்சுந்தன்வயல் ஊராட்சி மன்ற தலைவி சசிகலா லிங்கம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர்கள் இராமநாதபுரம், அச்சுந்தன்வயல், உத்திரகோசமங்கை பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நவாஸ் கனிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நவாஸ்கனியை ஆதரித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது. […]

Continue reading …

போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு; உதயநிதி பேச்சு!

Comments Off on போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு; உதயநிதி பேச்சு!

இந்தியத் தேர்தல் ஆணையம் 18வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “வடசென்னைக்கு 3 வது முறையாக வருகிறேன். தேர்தலுக்காக வருபவர்கள் […]

Continue reading …

டிஆர் பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா?

Comments Off on டிஆர் பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா?

பாஜகவில் டிஆர் பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் டி.ஆர்.பாலு. இவர் திமுகவின் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டு வருகிறார். டி.ஆர்.பாலு தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா ஏற்கனவே அமைச்சராகவுள்ளார். டி.ஆர்.பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை பாஜகவுக்கு இழுக்க தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் டி.ஆர்.பாலுவுக்கும் மனோன்மணிக்கும் […]

Continue reading …
Page 1 of 21123Next ›Last »