முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்காவில் உள்ள அமைப்பு கெளரவப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இருக்கும் The Rotary Foundation of Rotary International என்கிற அமைப்பு முதல்வரை கெளரவப்படுத்தி உள்ளது. அவரின் சேவையைப் பாராட்டி PAUL HARRIS FELLOW என கெளரவப்படுத்தி உள்ளது. குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை பார்த்தார் என கெளரவித்துள்ளது.
Continue reading …பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பின்னர் அவருடைய பிறந்த தினமான ஜூலை 11ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார். முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசியலில் நீண்ட காலமாக அமைச்சராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். இவர் எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர் சிறந்த சொற்பொழிவாளர் என பன்முக திறமையை கொண்டவர் […]
Continue reading …கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியமானது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூபாய் 127 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து ஆய்வு செய்தார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோர் இருந்தனர். அந்த சமயத்தில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கூறியது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையான […]
Continue reading …தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜூலை 6ஆம் முதல் 9ஆம் வரை ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கப்படும் எனதெரிவித்தார். மேலும், மக்கள் எப்போது பொருட்களை வாங்கவேண்டும் என்பது டோக்கனில் குறிப்பிட்டு உள்ளதாகவும்தெரிவித்துள்ளார். பிறகு 10ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவுவித்துள்ளது.
Continue reading …நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் இருக்கும் என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் காயமடைந்த 17 பேர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதை பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில்: அனல் மின் விபத்தில் பலியான 6 நபர்களின் […]
Continue reading …முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகடிவ் வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசியது: கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸை எதிராக போராடுகிறோம். 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் இருக்கிறது. இதை கொண்டு இந்தியாவில் அதிகமாக 30,000 பரிசோதனையை செய்ய எட்டியுள்ளோம். இதுவரை 9,19,204 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,358 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் எண்ணிக்கை 34,112 ஆக […]
Continue reading …லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் வீரமரணம் அடைந்துள்ளார். ராணுவ வீரர் பழனிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியது: லடாக் பகுதியில் சீனா ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் […]
Continue reading …சென்னை, ஜூன் 4 மாண்புமிகு அம்மாவின் அரசு, தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து பன்முக நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். முதல்வர் ஆணைக்கிணங்க, கொரோனா சிகிச்சைக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் […]
Continue reading …சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம், பெப்சி யூனியனுக்கு 50 லட்சம், நடன சங்கத்திற்கு 50 லட்சம் மற்றும் மாற்று திறனாளி சிறுவர்களுக்கு 25 லட்சம் அளித்துள்ளார். மீதமுள்ள 75 லட்சத்தை ஏழை தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவ தந்துள்ளார்.
Continue reading …சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை- IIT மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கை அமைப்பின் 94999 12345 என்ற குரல்வழிச் சேவையை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்கள். இந்த குரல்வழிச் சேவையானது, மொத்தஅலைபேசி பயனாளிகளில் நவீன கைபேசியை (ஸ்மார்ட் போன்) பயன்படுத்தாத 60 […]
Continue reading …