புது டெல்லி, ஏப்ரல் 28 மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மன்சுக் மாண்டவியா இந்தியத் துறைமுகங்களில் பணிக்குழுக்களை மாற்றுவது குறித்து பயணிகள் கப்பல்களை இயக்குபவர்கள், கப்பல் நிறுவனங்கள், கடற்பயண கூட்டமைப்புகள், மாலுமிகளின் சங்கங்கள் ஆகியவற்றுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். சர்வதேசக் கடற்பரப்பில் வேலை செய்கின்ற மற்றும் சிக்கித் தவிக்கின்ற இந்திய மாலுமிகளின் சூழ்நிலையைக் கண்காணிப்பது குறித்தும் அவர் கலந்துரையாடினார். வரும் காலத்தில் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு ஏதுவாக தற்போது வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் […]