Home » Posts tagged with » PM MODI (Page 3)

திடீரென மோடியை சந்தித்த மம்தா பானர்ஜி?

Comments Off on திடீரென மோடியை சந்தித்த மம்தா பானர்ஜி?

பிரமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்தபோது அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்த போது ராஜ்பவனில் மோடி -மம்தா சந்திப்பு நடந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் சுவேந்து அதிகாரி “பிரதமர் முன் தலை வணங்க மம்தா வந்திருக்கிறார், பிரதமரை மகிழ்விக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார், அவர் என்ன செய்தாலும் மோடி யாரையும் கொள்ளையடிக்க […]

Continue reading …

அண்ணாமலையின் பேட்டியால் பரபரப்பு!

Comments Off on அண்ணாமலையின் பேட்டியால் பரபரப்பு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மோடி கால் நகத்தின் தூசிக்கு கூட உதயநிதி சமமானவர் இல்லை என்று பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்வி ஒன்றுக்கு அண்ணாமலையிடம் பதிலளிக்கையில், “உதயநிதி என்பவர் யார்? அவருடைய தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் எடுத்துவிட்டு பார்த்தால் அவரால் இரண்டு ஓட்டுகள் கூட வாங்க முடியாது. தாத்தா அப்பா சம்பாதித்த பணத்தில் திரைக்கு வந்த ஒரு தோல்வியடைந்த நடிகர், தாத்தா அப்பா பெயரை […]

Continue reading …

செல்லூர் ராஜூவின் கேள்வி!

Comments Off on செல்லூர் ராஜூவின் கேள்வி!

செல்லூர் ராஜு நேற்று பிரதமர் மோடி நெல்லையில் பேசிய போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மட்டும் புகழ்ந்த நிலையில் எடப்பாடியாரை ஏன் புகழவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்த போது பல்லடம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று நெல்லையில் பிரதமர் மோடி பேசிய போது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த […]

Continue reading …

இனி திமுகவை தமிழகத்தில் பார்க்க முடியாது; பிரதமர் மோடி!

Comments Off on இனி திமுகவை தமிழகத்தில் பார்க்க முடியாது; பிரதமர் மோடி!

பிரதமர் மோடி திமுகவை இனி தமிழகத்தில் பார்க்க முடியாது என நெல்லையில் ஆவேசமாக பேசியுள்ளார். நேற்று பல்லடம் பகுதியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த மோடி பேசினார். அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது “இனி திமுகவை […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு கனிமொழி பதிலடி!

Comments Off on பிரதமர் மோடிக்கு கனிமொழி பதிலடி!

பிரதமர் மோடி திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என கூறினார். அதற்கு திமுக எம்பி கனிமொழி திமுக அழியும் என சொன்ன பலர் காணாமல் போய்விட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி, தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது என்றும் திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என்றும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் பங்கேற்றிருந்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “திமுக அழியும் […]

Continue reading …

மோடி மீண்டும் பிரதமராக எங்கள் கட்சி பாடுபடும்; தமிழருவி மணியன்

Comments Off on மோடி மீண்டும் பிரதமராக எங்கள் கட்சி பாடுபடும்; தமிழருவி மணியன்

காமராஜர் மக்கள் கட்சி தமிழருவி மணியன் பல்லடம் அருகே நடைபெறும் பாஜக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடி மீண்டும் பிரதமராக பாடுபடும் என்று அறிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்ட ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் கலந்துகொள்ள இன்று பிரதமர் மோடி பல்லடம் வந்தடைந்தார். இப்பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன், […]

Continue reading …

ஜல்லிக்கட்டுக்குக் காரணம் மோடிதான்;- அண்ணாமலை

Comments Off on ஜல்லிக்கட்டுக்குக் காரணம் மோடிதான்;- அண்ணாமலை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ராமேஸ்வரத்தில் கடந்த 2023 ஜூலை மாதம், தொடங்கப்பட்டது “என் மண் என் மக்கள்” என்ற நடைப்பயணம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் இன்று திருப்பூரில் நிறைவடைந்தது. இந்த நடைபயணத்தின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, அண்ணாமலை, தமிழருவி மணியன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “சரித்திரத்தில் இடம்பெறுள்ளோம். இத்தனை […]

Continue reading …

தமிழக மக்கள் அறிவாளிகள்; பிரதமர் மோடி!

Comments Off on தமிழக மக்கள் அறிவாளிகள்; பிரதமர் மோடி!

இன்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். பல்லடம் பகுதியில் நடந்த கூட்டத்தில், “தமிழக மக்கள் மிகவும் அறிவாளிகள், கொள்ளையர்களின் நாடகத்தை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்” என்று தெரிவித்தார். கூட்டத்தில் பேசும்போது, “தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்கள் பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்க, பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பி வருகின்றனர். மக்களுக்குள் விரோதத்தை ஏற்படுத்தி, அவர்களை பிரித்து, தங்களை நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தமிழக மக்கள் […]

Continue reading …

நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி!

Comments Off on நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி!

நேற்று பிரதமர் மோடி நள்ளிரவில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துடன் ரூ.360 கோடியில் கட்டப்பட்டுள்ள ஷிவ்பூர்- புல்வாரியா லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கவும், வேறுசில நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி நேற்றிரவு வாரணாசி வந்தார். நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய […]

Continue reading …

2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Comments Off on 2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பயணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு வருகிறார். பிப்ரவரி 27ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபின், 28ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் […]

Continue reading …