Home » Archives by category » சென்னை

இன்று இரவு சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]

இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா!

Comments Off on இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா!

இசை ரசிகர்களுக்கு எப்போதும் எவர் கிரீன் ஹிட் கொடுப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ‘ஹி1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் […]

Continue reading …

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Comments Off on அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

  ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.2080 குறைந்து, ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த அக்டோபரில் இஸ்ரேல் -பாலஸ்தீன மோதல் தொடங்கிய பின்னர் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,000ஐ கடந்து விற்பனையானது. இதற்கு பல்வேறு கரணங்கள் இருந்து வந்தாலும் அரசின் சுங்க வரியும் முக்கிய காரணமாக இருந்து வந்தது. […]

Continue reading …

ஆம்ஸ்ட்ராங் கொலையைக்கு குறித்து நாராயணன் திருப்பதி கருத்து!

Comments Off on ஆம்ஸ்ட்ராங் கொலையைக்கு குறித்து நாராயணன் திருப்பதி கருத்து!

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆம்ஸ்ட்ராங் கொலையின் மூலம் சென்னையில் அரசியல்வாதிகள் பின்னணியில் ராஜாங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் நடைபெறும் சம்பவங்கள், காவல் துறையின் நடவடிக்கைகள், கைதுகள், அதனை தொடர்ந்து வரும் செய்திகள் அனைத்தும், இத்தனை காலம் சென்னை மாநகரம் ரவுடிகளின் ராஜ்யத்தில் எவ்வாறு இருந்து வந்தது என்பதை தெளிவாக்குகிறது. அரசியல் போர்வையில், அரசியல்வாதிகளின் பின்னணியில் இந்த ராஜாங்கம் நடைபெற்றுக் […]

Continue reading …

விடாமுயற்சி அப்டேட் உறுதி!

Comments Off on விடாமுயற்சி அப்டேட் உறுதி!

“விடாமுயற்சி” படத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தது. சற்றுமுன் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் “விடாமுயற்சி” அப்டேட் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். “விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த […]

Continue reading …

சென்னையில் 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது!

Comments Off on சென்னையில் 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது!

77 குற்றவாளிகள் சென்னையில் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்திப்ராய் ரத்தோர், அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-ஆக இருந்த அருண், சென்னை புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தனது முதல் பேட்டியிலேயே […]

Continue reading …

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

Comments Off on சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மடிப்பாக்கம் பிரதான சாலை, மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “எஸ்.7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் கேஈசி நிறுவனத்தினர் சென்னை மெட்ரோ இரயில் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் 13.07.2024 மற்றும் 14.07.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து […]

Continue reading …

நாளை மின்சார ரயில்கள் ரத்து!

Comments Off on நாளை மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக நாளை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து டில்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், […]

Continue reading …

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குண்டு மிரட்டல!

Comments Off on அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குண்டு மிரட்டல!

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து விசாரணை செய்தபோது அது போலியான மிரட்டல் என்று தெரிய வருகிறது. சமீப காலத்தில் மூன்று முறை சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து விட்டது. அதேபோல் கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும் சென்னை அண்ணா […]

Continue reading …

தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உதவியா?

Comments Off on தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உதவியா?

270 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை மூலம் கடத்திய வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சபீர் அலி என்பவர் சென்னையில் சர்வதேச விமானங்கள் செல்லும் பகுதியில் பரிசுப் பொருள் கடை திறக்க பாஜக பிரமுகர் பிருத்வி உதவியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சபீர் அலி வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பாஜக பிரமுகர் பிருத்வி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் […]

Continue reading …
Page 1 of 77123Next ›Last »