ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் இந்தியாவில் கொரோனாவுக்காக செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதை இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உலகமே முடங்கியது. இந்தியாவில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டனை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தியாவில் அதன் தயாரிப்பு பணிகள் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தால் […]
இந்தோனேஷியாவில் தீவு ஒன்றில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. குட்டிக் குட்டித் தீவுகள் உள்ள இந்தோனேஷியாவில் கணிசமான அளவில் வெடிக்கும் நிலையில் எரிமலைகளும் உள்ளன. நிலத்தகடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ளதால் அடிக்கடி இந்தோனேசியாவில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நடக்கிறது. கடந்த 16ம் தேதி ருயாங்க் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று மீண்டும் ருயாங் தீவில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இம்முறை […]
Continue reading …28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் மற்றும் இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தற்காக நீக்கியுள்ளது. ப்ராஜக்ட் நிம்பஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து 28 ஊழியர்கள், நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூகுள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தையடுத்து கூகுள் நிறுவனம் போராட்டம் நடத்திய […]
Continue reading …கடந்த இரண்டு நாட்களாக துபாயில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை முடங்கியதோடு, மழை நீர் இன்னும் வடியாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக துபாயில் பேய் மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் துபாய் நகரம் இன்னும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது. பெருமழை குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனமான WAM இது ‘வரலாறு காணாத வானிலை நிகழ்வு’, கடந்த 1949-ம் ஆண்டு முதல் […]
Continue reading …துபாயில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் இந்த மழைக்கு மேக விதைப்பு காரணமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். துபாயில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக துபாயிலுள்ள பல சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக துபாய் விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கி இருந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து துபாய் செல்லும் […]
Continue reading …ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 2.13 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்ட விரோத செய்திகள் பரப்புதல், பாலியல் காணொளிகளை பரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேலான இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசிடம் எக்ஸ் தளம் குற்றம் […]
Continue reading …வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலியான சம்பவம் சிட்னியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப்பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தனது கையில் கத்தியை வைத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டித் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். பலரும் கடைகளுக்குள் கதவை பூட்டிக்கொண்டு பதுங்கியிருக்கிறார்கள். […]
Continue reading …நேற்று திடீரென நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் சில நாடுகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்றிரவு திடீரென ரிக்டர் அளவில் 4.8 என நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும் இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க்கில் ஏற்கனவே விண்ணை முட்டும் கட்டிடங்கள் பல […]
Continue reading …மொசாம்பிக் நாடு உலகில் வறுமையில் வாடும் நாடு. இந்நாட்டில் எரிவாயு வளம் அதிகம் கொண்ட நாடாக உள்ளது. இருந்த போதிலும் இங்கு, 3-ல் 2 பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் இருந்து மீள முயன்று கொண்டிருந்த மக்களுக்கு எதிராக கடந்த 2017ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஊடுருவி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இரு தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 5 ஆயிரம் […]
Continue reading …இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்கியதோடு மீன்பிடி வலைகளை அறுத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் […]
Continue reading …