மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக நாளை வாக்கு இயந்திரங்கள் பிரிக்கப்படும் பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகள் வரும் 30 தேதி தொடங்க உள்ளது. வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு புத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுத்து முடிக்கப்படும் -தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி
திருச்சியில் 24-ந் தேதி எடப்பாடி பிரச்சாரம். பொதுக்கூட்ட இடத்தை மாவட்ட செயலாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை அ.தி.மு.க. […]
Continue reading …திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான இலவச தியான வகுப்பு இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தியான வகுப்பு இன்று தொடங்கியது இந்த வகுப்பு இன்று முதல் 21ஆம் தேதி வியாழக்கிழமை மூன்று நாட்கள் நடக்கிறது 21-ந் தேதி (வியாழக்கிழமை)வரை மூன்று நாட்கள் நடக்கிறது. தியான வகுப்பை மாவட்ட நீதிபதி கே.பாபு மற்றும் தலைமைகுற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா மற்றும் மூன்றாவது கூடுதல் நீதிபதி தங்கவேல் ஆகியோர்து வக்கி வைத்தார்கள். முதல் நாள் நிகழ்ச்சியை […]
Continue reading …திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி ,கரூர் பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்வது, அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம் பாலன், சந்திரசேகர், […]
Continue reading …ரூ 1000 கோடி மதிப்பிலான திட்டம் 2025ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும். திருச்சியில் பாரிவேந்தர் பேட்டி. கடந்த 5 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது மத்திய அரசு வழங்கிய ரூ. 17.5 கோடி முழுவதும் மக்கள் நலப்பணிக்கு செலவிடப்பட்டது. இதில் பெரம்பலுாருக்கு ரூ. 3.37 கோடி, லால்குடிக்கு ரூ.3.32 கோடி, மண்ணச்சநல்லுாருக்கு ரூ.2.80 கோடி, துறையூருக்கு ரூ.3.79 கோடி, முசிறிக்கு ரூ.2.40 கோடி, குளித்தலைக்கு ரூ. 2.73 கோடி செலவிடப்பட்டது. இதில் பெரும்பகுதி தொகை அரசு […]
Continue reading …முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டும் இருந்து 59 கோடி ரூபாய் திமுக வாங்கி உள்ளதாக வெளியான செய்தி குறித்து விளக்கமளித்துள்ளார். அவ்விளக்கத்தில், “திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் திமுக ஆட்சியில் […]
Continue reading …மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளதாகவும் இதனால் தமிழ் திரை உலகினர் பீதியாகி உள்ளனர். சாதிக்குடன் தொடர்பில் இருந்த மலேசிய பிரமுகர் தமிழ் திரையுலகில் பட விநியோகம் பைனான்ஸ் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் அவருக்கு இன்னொரு முகம் இருப்பதாகவும் அந்த முகம் குறித்து தான் தற்போது மத்திய போதை தடுப்பு […]
Continue reading …இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குளத்தில் தீ வைத்து அதில் குதித்து சாகசம் செய்த வீடியோ வைரலானது. அவரையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் இளைஞர்களிடையே தலைவிரித்தாடுகிறது. தங்கள் ரீல்ஸை அதிக லைக்ஸ் பெற வைப்பதற்காகவும், ஃபாலோவர்களை அதிகரிப்பதற்காகவும் ஆபத்தான பல சாகசங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் புத்தந்தருவை குளத்தில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்கள் இளைஞர்கள் சிலர். […]
Continue reading …சமீபத்தில் டில்லியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இன்று சென்னை அழைத்து வரப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் மூன்று தமிழர்கள் போதைப் பொருளுடன் கைதானார். இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் அவர் டில்லியில் கைது செய்யப்பட்டார். அவரை […]
Continue reading …தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கியது முதலே தமிழிசை தான் எம்.பியாக போட்டியிட விரும்புவது குறித்து தொடர்ந்து பாஜக மேலிடத்திடம் பேசி வந்தார். அவர் புதுச்சேரியில் போட்டியிட விருப்பப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி […]
Continue reading …