நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசுவது திமிர்த்தனம் என்றும் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசினார். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் “420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என […]
இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயண நிறைவுவிழாவை ஒட்டி, மும்பையில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம். இதில்மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி, ரேவந்த் ரெட்டி, சாம்பாய் சோரன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்பு.
Continue reading …மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு. முதற்கட்ட தேர்தலில் விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 19 தமிழகத்தில் முதற்கட்ட ஒரே வாக்கு பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.
Continue reading …தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி நுழைய முடியாது என்றும் வடநாட்டில் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா வலுவாக கால் ஊன்ற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் அபார வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆளும் காங்கிரஸ் […]
Continue reading …லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக கோடிக்கணக்கில் வழங்கிய நிறுவனங்களில் அதிகளவில் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் முறையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை செய்ததுடன், இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்த விவரங்களை சமர்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வகையில் எஸ்பிஐ அளித்த விவரங்கள் தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிகளவில் தேர்தல் நன்கொடை பெற்ற […]
Continue reading …சிறுமியை வன்கொடுமை செய்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். இவரது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்றுள்ளார். அப்போது எடியூரப்பா சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொல்லாமல் இருந்தால் […]
Continue reading …பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக புகார்.
Continue reading …திருமணத்திற்கு வீடியோ எடுக்க வந்தவருடன் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகள் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் லட்சுமண ராய் தனது மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்திருந்தார். இத்திருமணத்திற்கு வீடியோ எடுக்க தனது ஊரைச் சேர்ந்த கோலு குமார் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாக தெரிகிறது. திடீரென அந்த வீட்டின் மணமகளுடன் வீடியோகிராபருக்கு பழக்கம் ஏற்பட்டதை அடுத்து திருமணத்திற்கு […]
Continue reading …குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். கடந்தாண்டு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று அறிவித்தது. இக்குழுவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார். மக்களவை, மாநிலப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய கட்டமைப்பை கருத்தில் கொண்டு, […]
Continue reading …மத்திய அரசு ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்த ஓடிடி தளங்கள், இணையதளங்கள், செயலிகள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு (Ministry of Information & Broadcasting) அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னும் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கத்தை வெளியிட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள பக்கங்கள் (Social Media) மற்றும் ஓடிடி தளங்கள் […]
Continue reading …