Home » Archives by category » இந்தியா (Page 133)

2020 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டது என்ன பட்டியல் வெளியிட்டது கூகுள்!!

Comments Off on 2020 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டது என்ன பட்டியல் வெளியிட்டது கூகுள்!!

கூகிள் இந்தியா தனது வருடாந்திர ‘Year in Search’ முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அதற்கும் அப்பால் உள்ள அனைத்து தனித்துவமான தருணங்களையும் எடுத்துக்காட்டுகிறது. கூகிளில் மிகவும் பிரபலமான தேடல்கள் 2020 இன் மிகத் துல்லியமான ஸ்னாப்ஷாட்டை வழங்குகின்றன. கொடிய கோவிட் -19 நோய்த்தொற்று உலகெங்கிலும் ஒரு புதிய நிறுத்தத்திற்கு உயிரூட்டுவதால், இந்த ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட பாடங்களில் தொற்றுநோய் ஒன்றாகும் என்பதில் ஆச்சரியமில்லை. கூகிளின் வருடாந்திர அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த […]

Continue reading …

ஹைதராபாத் தேர்தல் முடிவு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!!

Comments Off on ஹைதராபாத் தேர்தல் முடிவு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!!

தெலுங்கானா மாநிலம் தலைநகரான ஹைதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது, மேயரை வென்றெடுக்க தேவையான இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை மாறாக கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன அதன் படி தெலுங்கானா ராஷ்டிரிய சமதி 55 இடங்களிலும் பாஜக 48 இடங்களிலும், AIMIM 43 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் […]

Continue reading …

அவசரமாக தலைமை தேர்தல் ஆணையம் சென்ற திமுக காரணம் என்ன?

Comments Off on அவசரமாக தலைமை தேர்தல் ஆணையம் சென்ற திமுக காரணம் என்ன?

தபால் ஓட்டு முறையில், அதிக அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அதை கைவிடும்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நேரடியாக தேர்தலில் ஓட்டளிக்கும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, அவர்களுக்காக, தபால் ஓட்டு போடும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பீகார் […]

Continue reading …

முன்னாள் நீதிபதி அதிரடி கைது காரணம் என்ன?

Comments Off on முன்னாள் நீதிபதி அதிரடி கைது காரணம் என்ன?

நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை சென்னை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.இதையடுத்து கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Continue reading …

அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம் !

Comments Off on அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம் !
அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம் !

உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center – BIDMC) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ‘Sadhguru Center for a Conscious Planet’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் […]

Continue reading …

ஆட்டம் காட்ட இருக்கும் நிவர் புயல்…24 மணி நேரத்தில் அதித்தீவிரம்

Comments Off on ஆட்டம் காட்ட இருக்கும் நிவர் புயல்…24 மணி நேரத்தில் அதித்தீவிரம்

அடுத்த 24மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளாத தகவல் மேலும் புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது என்று தகவல்.மணிக்கு 5 கிமீ வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருவதாகவும் தலவல். நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிமீ வரை காற்றின் வேகம் […]

Continue reading …

கணக்கு காட்டாத 266 NGO க்கள் மீது நடவடிக்கை…மத்திய அரசு உத்தரவு

Comments Off on கணக்கு காட்டாத 266 NGO க்கள் மீது நடவடிக்கை…மத்திய அரசு உத்தரவு

போலியான பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங்கில் கண்டறியப்பட்ட 266-ம் மேற்பட்ட என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியது. முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் நடத்தப்படும் NGO க்களின் தொண்டு நிறுவனங்கள் போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக வந்த புகார்களை அடுத்து முதல் முறையாக NGO க்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயிரத்து 276 NGO க்களுக்கு மத்திய அரசு தலா ரூ. 25 […]

Continue reading …

மன்னிப்பு கேட்டது ட்விட்டர்

Comments Off on மன்னிப்பு கேட்டது ட்விட்டர்

புது தில்லி: லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது. லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக லே உள்ளது. மேலும், லடாக், ஜம்மு – காஷ்மீா் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இவை இந்திய அரசமைப்பு சட்டத்தால் நிா்வகிக்கப்பட்டு வருபவை. ஆனால் ட்விட்டா் நிறுவனத்தின் வரைபடத்தில் ‘ஜியோ டாக்கிங் ‘ முறையில் இப்பகுதிகளை சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதியாக தவறாக சித்திரித்து […]

Continue reading …

தமிழக போலீசார் தேடிவந்தவரை போட்டு தள்ளிய கேரள போலீஸ் !!

Comments Off on தமிழக போலீசார் தேடிவந்தவரை போட்டு தள்ளிய கேரள போலீஸ் !!

தமிழக போலீஸார் தேடி வந்த புதுக்கோட்டை நக்ஸலைட் வேல்முருகனை, கேரள போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த செயலுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கேரளாவில் வயநாடு மலைப் பகுதியில் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில், ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நக்ஸலைட்களும் உள்ளனர். விவசாய தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு நக்சலைட்டுகள்தான் காரணம் என கேரள அரசு ஏற்கனவே குற்றம் சாட்டிருந்தது.இதனால் நக்சலைட்டுகளை ஒழிக்க “தண்டர் போல்ட் அதிரடிப் […]

Continue reading …

காளி பூஜையை தொடங்கி வைத்ததால் வந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கோரினார் சாகிப் அல் ஹசன்

Comments Off on காளி பூஜையை தொடங்கி வைத்ததால் வந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கோரினார் சாகிப் அல் ஹசன்

இந்து மத சம்மத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹாசன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த நிலையில்,இரண்டு நாட்களுக்கு முன்பு காளி பூஜையை துவக்கிவைக்க ஷகிப் அல் ஹாசன் கொல்கத்தா சென்றுள்ளார். மேலும், காளி சிலையின் முன்பு வழிபடுவது போன்ற புகைப்படங்களும் வெளியானதால் இஸ்லாமியர்கள் கொள்கைக்கு எதிராகவும் அவர்களது மனதை ஷகிப் புண்படுத்திவிட்டார் என்று சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் […]

Continue reading …