புது டெல்லி, ஏப்ரல் 28 அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் விநியோகிக்கும் சேவையில் நாடெங்கிலும் 403 உதான் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. உயிர்காக்கும் உதான் சேவையில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை, தனியார் விமானங்கள் ஆகியவற்றின் மூலம் 403 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 235 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்களால் இயக்கப்பட்டன. இதுவரை, 748.68 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொண்ட சரக்குப் போக்குவரத்து கையாளப்பட்டுள்ளது. இது நாள்வரை உயிர்காக்கும் உதான் விமானங்கள் 3,97,632 […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 28 ஊரடங்குக்கு இடையேயும், கோதுமை அறுவடை நாடு முழுவதும் விறுவிறுப்பான வேகத்தில் தொடர்கிறது. நடப்பாண்டு அறுவடையின் போது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் அரசின் நிலையான இயக்க நடைமுறை பின்பற்றப்படுகிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், கொரானா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசின் வேளாண்மைத் துறை, மற்றும் விவசாயிகள் கூட்டுறவு நலத்துறை, ஆகியவை இணைந்து மாநிலங்களுக்கு நிலையான இயக்க நடைமுறை (SOP) குறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மாநிலங்கள் அறிவித்தபடி, கோதுமைப் பயிரின் அறுவடை மத்தியப்பிரதேசத்தில் 98 முதல் 99 சதவீதம், ராஜஸ்தானில் 92 […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 28 நாடு முழுக்க பஞ்சாயத்துகளுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிக்க அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் டோமர் கூறியுள்ளார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா என்ற புதிய திட்டத்தின் வழிகாட்டுதல்களை புதுதில்லியில் அவர் வெளியிட்டு பேசினார். தங்கள் வீட்டு சொத்துகளை ஆவணப்படுத்தும் உரிமையை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்கும் என்றும், இந்த விவரங்களைப் […]
Continue reading …கோவிட் 19 நோய்க்கு எதிரான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடுமுழுவதும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து வைரஸ் தொற்றி விடாமல் பாதுகாப்பான தொலைவில் இருக்க உதவும் வகையிலான ஆரோக்கிய சேது என்ற செயலியையும் மத்திய அரசு ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை, அனைத்துத் துறை ஊழியர்களும் ஆரோக்கிய சேது அலைபேசி செயலியைப் பயன்படுத்துமாறு அனைத்து துறைகளையும் அறிவுறுத்தியுள்ளது. தாங்கள் எந்த அளவிற்கு கோவிட் 19 (கொரோனா வைரஸ்) நோயால் பாதிக்கப்படலாம் என்பதை […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 27 உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நோவல் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை இந்திய விமானப் படை அதிகரித்துள்ளது. இந்நோயை, பயனுள்ள முறையில் எதிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கும், ஆதரவு முகமைகளுக்கும் உதவும் வகையில், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை விமானம் மூலம், இந்திய விமானப்படை தொடர்ந்து ஏற்றிச் சென்று வருகிறது. கோவிட் 19 நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு உதவும் வகையில் 22 டன் எடையுள்ள மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மிசோரமில் உள்ள Lengpui லெங்க்புயி விமானநிலையத்திற்கு இந்திய விமானப்படை விமானம் 25/04/2020 அன்று சென்றடைந்தது. இந்த மருந்துப் பொருட்கள் மிசோரம் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 27 கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் மாறி வரும் சூழ்நிலைகள் பற்றியும், சூழ்நிலையைக் கையாள்வது பற்றியும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு காணொளி மூலம் முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு மார்ச் 20, ஏப்ரல் 2, ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். முடக்கநிலை […]
Continue reading …ஏப்ரல் 27 எதிர்பாராத அளவிற்கு உலகையே உலுக்கி வரும், உலகுக்கே சுகாதார சவாலாக உள்ள கோவிட் 19 நோயால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, பலமுனை அணுகுமுறையை அரசு எடுத்து வருகிறது. இந்நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் பங்காற்றும் முன்னணிப் போராளிகளுக்கு காப்பீட்டுத் துறை, உடல்நலக் காப்பீடு வழங்கி அரசின் முயற்சிகளுக்கு, பயனுள்ள முறையில் உதவி புரிந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் 15 ஏப்ரல், 2020 அன்று வெளியிட்ட ஆணையின்படி திருத்தியமைக்கப்பட்ட SOP விதிமுறைகளின்படி, அனைத்து துறைகளிலும் உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும் முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து தொழில் துறை நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், பணியிடங்கள், அலுவலகங்கள், தலங்கள் அனைத்திலும் உள்ள பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்துப் பணியாளர்களுக்கும், மருத்துவக் காப்பீடு […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 26 எனதருமை நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் பொது ஊரடங்குக் காலத்தில் இந்த மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மனதின் குரலின் பொருட்டு வந்த ஆலோசனைகள், தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்க்கும் போது, எப்போதும் வருவதை விட பல மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றது. ஏகப்பட்ட விஷயங்களை தனக்குள் தாங்கிக் கொண்டு, உங்களது இந்த மனதின் குரல் என் வரையில் வந்திருக்கின்றது. இவற்றை எத்தனை அதிகம் முடியுமோ அத்தனை அதிகம் படிக்க […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 25 தேசிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு 28 நாட்களுக்கு பிறகு, பஞ்சாப் மாநிலம், கபுர்தாலாவில் உள்ள இந்திய ரயில்வேயின் தயாரிப்பு பிரிவான ரயில் பெட்டி தொழிற்சாலை ஏப்ரல் 23ம் தேதி அன்று தனது தயாரிப்பு பணியை மீண்டும் தொடங்கியது. கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இடைவிடாத போரில், உள்துறை அமைச்சகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் வெளியிட்ட அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், வழிமுறைகள் மற்றும் உத்தரவுகளை பின்பற்றி தொழிற்சாலை திறக்கப்பட்டது. ரயில் பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 24 பிரதமர் நரேந்திர மோடி நேற்று (23/04/2020) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். இரண்டு தலைவர்களும் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள சுகாதார மற்றும் பொருளாதார சவால்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பெருந்தொற்றுக்கு எதிராக தங்களது நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அத்தொற்று ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை எதிர்கொண்டு அதனைச் சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்களை இருவரும் […]
Continue reading …