
மருத்துவமனையில் தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாவூத் இப்ராகிம் கடந்த 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவரும், தாதாவுமான இரண்டு நாட்களுக்கு முன்னதாக கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அவர் அனுமதிக்கப்பட்ட தளத்தில் வேறு எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை எனவும், அந்த மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாவூத் இப்ராகிம் 2வது திருமணம் செய்து கொண்டு கராச்சியில் தங்கியிருப்பதாக அவரது சகோதரர் என்.ஐ.ஏவிடம் கூறியிருந்த நிலையில், தாவூத் இப்ராகிமுக்கு விஷம் […]
Continue reading …
இன்று ஒரே நாளில் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் சமீபத்தில் இருவர் புகுந்து கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் […]
Continue reading …
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், டில்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் […]
Continue reading …
மத்திய அரசு சாம்சங் கேலக்ஸி செல்போன் பயன்படுத்துபவர்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கிங் செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சாம்சங் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன்களில் ஒன்று. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சாம்சங் கேலக்ஸி பயன்படுத்துவார்கள் தனிப்பட்ட தகவல்கள் புகைப்படங்கள் போன்றவை ஹேக் செய்யப்படுவதாக சமீபகாலமாக அதிகமாக புகார் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பின் நம்பர் போட்டும் விரல் ரேகை பயன்படுத்தியும் தங்களது செல்போன் லாக் செய்யப்பட்டு இருப்பதாகவும் தங்களது சமூக வலைதளங்களை […]
Continue reading …
இந்திய கப்பற்படை கப்பல்கள் அரபிக்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை மீட்பதற்காக விரைந்துள்ளன. கடற்கொள்ளையர்களின் புகலிடமாக சோமாலியா பகுதியிலிருந்து பிரிந்த பண்ட்லேண்ட் பகுதி திகழ்கிறது. அரபிக்கடல் பகுதிகளில் பயணம் செய்யும் கப்பல்களை கொள்ளையடிப்பது சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு வழக்கமாக உள்ளது. இன்று மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்.வி.ருயின் என்ற கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. சோமாலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த இந்த கப்பலை வழிமறித்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை கைது செய்து கப்பலையும் கடத்தி கொண்டு செல்கின்றனர். அவர்கள் […]
Continue reading …
காங்கிரஸ், தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்பிகள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து இந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையைக் காட்டவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடந்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில், கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது […]
Continue reading …
நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேச முதலமைச்சர் தயார் என தமிழ்நாடு அரசு உத்தநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஆளுநர் பல்வேறு மசோதாக்களையும் நிலுவையில் வைத்துள்ள நிலையில் தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் சாசனம் தொடர்பான விவகாரம். தேநீர் அருந்தி கேக் சாப்பிடுவதன் மூலம் […]
Continue reading …
இன்று நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்கிய போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து இருந்து 2 நபர்கள் குதித்து வந்தனர். அவர்களிடம் வண்ணங்களில் ஆன புகை வீசும் குப்பி இருந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவர்கள் மணிப்பூருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அவர்கள் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை […]
Continue reading …
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுக் கொண்டார். ராய்ப்பூரில் நடந்த பதவியேற்பு விழாவில் விஷ்ணு தேவ் சாய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருண் சாவோ, விஜய் சர்மா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
Continue reading …
காங்கிரஸ் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு உதயநிதி சனாதனம் குறித்து பேசியதே காரணம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து […]
Continue reading …