
இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் 8 வயது மகனையும், தாயையும் உயிரோடு எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பழங்குடியினத்தை சேர்ந்த குக்கி, நாகா சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கலவரமாக மாறியது. ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து […]
Continue reading …
திருப்பதி கோவிலில் இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் தரிசனம் செய்தார். நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி 1” மற்றும் “பாகுபலி 2” ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. அவரது சம்பளமும் அதிகரித்துள்ளது. ஆனால், “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” […]
Continue reading …
தனது விளைச்சல் நிலத்திலிருந்து விவசாயி ஒருவர் கைப்பற்றிய வைரத்தை 2 கோடிக்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிரி, மஹாதேவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழை பெய்த பின்னர், வைரக்கற்கள் தானாக வெளிவருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு விவசாயி ஒருவர் ரூ.60 லட்சம் வைரத்தை உள்ளூர் வணிகரிடம் அதிக தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது. அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு கர்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி 2 […]
Continue reading …
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் இன்னும் நூற்றுக்கும் மேலானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் ஒரு சில பயணிகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் தென்படவில்லை என்றும் தெரிய […]
Continue reading …
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பை மென்று சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரூக்பாத் மாவட்டத்திலுள்ள மத்னாபூரில் வசிக்கும் தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் (3 வயது). இவர் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பாட்டியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் முன் வந்து பார்த்தபோது, ஆயுஷ் தன் வாயில் எதையோ மென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த பெற்றோர், அதை வாயில் இருந்து எடுத்தபோதுதான் அது பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். […]
Continue reading …
சாக்ஷி மாலிக் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பிரிஜ்பூஷண் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]
Continue reading …
ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். நேற்றிரவு கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. இதையடுத்து அருகில் இருந்த […]
Continue reading …
காலையில் அனைவரின் காதினிலும் விழுந்த மிகவும் சோகமான செய்தியே ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து. இந்த கோர விபத்தில் சற்றுமுன் கிடைத்த தகவலின் படி ன்சுமார் 288 பேர் பலியாகினர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் மீட்புப்பணியினர் தொடர்ந்து துரிதமாக செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் […]
Continue reading …
ஒடிசா மாநிலத்தில் நடந்த கோரமான ரயில் விபத்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகை வழங்கப்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading …
இதுவரை ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சுமார் 300 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் 900க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை அடுத்து ஏராளமான தமிழர்களும் இதில் பயணம் செய்து வந்துள்ளனர். இந்த ரயிலில் பயணம் செய்த தமிழர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் சிறு காயம் அடைந்த […]
Continue reading …