
குளிர்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி வரும் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுலாந்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தி தற்போது பாதயாத்திரை செய்து வருகிறார். சமீபத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவு செய்யவுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் 29ம் […]
Continue reading …
மலையாள நடிகர் உள்பட 2 பேரை போதைப்பொருட்களுடன் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிலர் போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அப்பகுதியில் வரும் வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதில், அப்பகுதி வழியாகக் காரில் வந்த 2 பேரிடம் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 5 கிராம் அளவிலான போதைப் பொருள் (எம்டிஎம்ஏ) […]
Continue reading …
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை அரசு முறை நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். நாளை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றது. நாளை திண்டுக்கலில் காந்தி கிராமத்திலுள்ள காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாணவர்களுக்கு பட்டமளிக்கும் பிரதமர் மோடி அந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். […]
Continue reading …
பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்த நபரால் கேரள மாநிலம் மலப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பெருங்கல் மன்னார் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த பேருந்தை நோக்கி ஓடி வந்த நபர் பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டினார். இதில், முன்பக்க சில்லு சில்லாக கண்ணாடி உடைந்து நொறுங்கி, அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதன்பின்னர், அவர், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து எழுந்திருக்க மறுத்தார். இதுகுறித்து விசாரணையில், அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மரின் தீவிர […]
Continue reading …
இந்தியன் ரயில்வே சீன எல்லை வரை வடகிழக்கு மாநிலங்களில் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் ரயில்வே அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சீன எல்லை வரை ரயில் பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அண்டை நாடான பூடான் வரை ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் இந்தியன் ரயில்வே ஈடுபட்டு வரும் நிலையில் வடகிழக்கு எல்லையான அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் புதிய ரயில் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீன எல்லையை […]
Continue reading …
காங்கிரஸ் பிரமுகர் சசி தரூர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை கூட நான் பொருட்படுத்தவில்லை, ஆனால் வெற்றிக்கு முயற்சி கூட செய்யவில்லை என்பதை தான் நான் பொருட்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 169 என்ற இலக்கை வெகு எளிதாக விக்கெட் இழப்பின்றி 16 […]
Continue reading …
ஆசிரியர் திட்டியதால் கர்நாடக மாநிலத்தில் 14வது மாடியிலிருந்து மாணவன் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் வசித்து வரும் மோஹின் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் பிட் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆசிரியரிடம் பிடிப்பட்ட அவரை ஆசிரியர் கடுமையாகத் திட்டி தண்டனை கொடுத்துள்ளார். அன்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து, […]
Continue reading …
பாகிஸ்தான் டிரோன் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஊடுருவியதையடுத்து அந்த டிரோன் பிஎஸ்எப் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவுவதும் அவர்களை இந்திய வீரர்கள் வேட்டையாடி நடவடிக்கை எடுத்து வருவதுமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று பாகிஸ்தானின் டிரோன் ஒன்று திடீரென ஊடுருவியதாகவும் இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானின் டிரோனை சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அந்த […]
Continue reading …
அசாம் மாநில முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என்று அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநில முதலமைச்சர் சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் […]
Continue reading …
ஆஸ்திரேலியாவில் பிரபலமான டீக்கடை வைத்து ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாக சம்பாதித்த இளைஞர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியா நாட்டில் பிபிஏ படிக்க சென்றுள்ளார். திடீரென ஒரு சில காரணங்களால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதன் பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் டிராப் அவுட் சாய்வாலா என்ற பெயரில் டீக்கடையை தொடங்கினார். இந்த டீக்கடை மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து பல கிளைகள் தொடங்கிய அவர் தற்போது 5 கோடி […]
Continue reading …