Home » Archives by category » உலகம் (Page 28)

உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்!

Comments Off on உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலக வங்கியின் தலைவராக பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய உலக வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் என்பவர் வரும் ஜூன் மாதம் பதவி விலக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. புதிய உலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா என்பவரை அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவரது நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் கார்டு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்த அஜய் […]

Continue reading …

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

Comments Off on இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

துருக்கி மற்றும் சிரியாவை தொடர்ந்து தற்போது இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியில் உள்ள அனைத்து நாடுகளும் பல கண்ட திட்டுகள் மீது அமைந்துள்ளன. இந்த கண்டத்திட்டுகள் (புவி தகடுகள்) மெல்ல நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இரு கண்ட திட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் உருவாகின்றது. சமீபமாக துருக்கி, சிரியா பகுதியில் இவ்வாறாக கண்டத்திட்டுகள் நகர்ந்ததால் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். நேற்று ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதியில் தொடர்ந்து 5 முறை […]

Continue reading …

நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான்!

Comments Off on நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான்!

இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து 5 முறை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், ஏராளமான உயிர்பலிகளும் ஏற்பட்டன. உலக நாடுகள் பல தங்களது மீட்பு படைகளை அனுப்பி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுவரை துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் […]

Continue reading …

வாரத்தில் 4 நாட்களே வேலையா?

Comments Off on வாரத்தில் 4 நாட்களே வேலையா?

பிரிட்டனில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யும் சோதனை திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிரிட்டனில் தொடங்கப்பட்டது. சுமார் 61 நிறுவனங்கள் இச்சோதனை திட்டத்தை தொடங்கிய நிலையில் சோதனை முடிவில் இத்திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் இம்முறையை தொடர போவதாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 91 சதவீத நிறுவனங்கள் இந்த சோதனை திட்டம் வெற்றி […]

Continue reading …

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்!

Comments Off on மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்!

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 47 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. நேற்று திடீரென நள்ளிரவில் மீண்டும் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் இந்த புதிய நிலநடுக்கத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று இரவு 6.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் […]

Continue reading …

சர்ச்சையான திரைப்படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது!

Comments Off on சர்ச்சையான திரைப்படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது!

பெரும் சர்ச்சைக்குள்ளான திரைப்படமான “காஷ்மீர் பைல்ஸ்” தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளது. இந்திய திரைத்துறையில் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமா துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை வென்றவர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கு விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான காஷ்மீர் பைல்ஸ் விருதை வென்றுள்ளது. கடந்தாண்டு வெளியான இத்திரைப்படம் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் கொல்லப்பட்டதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. […]

Continue reading …

இருநாட்டு மக்களும் செயலியால் மகிழ்ச்சி!

Comments Off on இருநாட்டு மக்களும் செயலியால் மகிழ்ச்சி!

இந்தியாவின் யூபிஐம், சிங்கப்பூரின் பேநௌ ஆகிய இரண்டு பணத்தை பரிமாற்றம் செய்யும் செயலிகள் தொடங்கி உள்ளதால் இருநாட்டின் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளுக்குமான இச்செயல் இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியன் லூங் முன்னிலையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையாக இந்த இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பு மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் […]

Continue reading …

தாதாசாகேப் பால்கே விருதுகள் யார் யாருக்கு?

Comments Off on தாதாசாகேப் பால்கே விருதுகள் யார் யாருக்கு?

திரைப்படங்கள் இந்தியாவில் முதன்முதலாக உருவாக காரணமாக இருந்த இயக்குனர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் பல்வேறு பிரிவுகளில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழு விவரம்: சிறந்த திரைப்படம் : தி காஷ்மீர் ஃபைல்ஸ், சிறந்த இயக்குனர் : ஆர்.பால்கி (சுப்: ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்), சிறந்த நடிகர் : ரன்பீர் கபூர் (பிரம்மாஸ்திரா), சிறந்த நடிகை […]

Continue reading …

பின்லாந்தில் புதிய முயற்சி..!

Comments Off on பின்லாந்தில் புதிய முயற்சி..!

காரில் பெட்ரோல் நிரப்பும் ரோபோட்டை பின்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல வகைகளில் உலகில் பல வேலைகளுக்கு மனிதர்களுக்கு பதிலாக ரோபோட் செய்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காரில் பெட்ரோல் உள்பட எரிவாயுவை நிரப்புவதற்காக ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை ரோபோட் காரில் மிகச் சரியாக எரிபொருளை நிரப்பும். கார் உரிமையாளர்கள் காரில் இருந்து இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை. காரின் […]

Continue reading …

எலான் மஸ்க்கின் பரபரப்பு பேச்சு!

Comments Off on எலான் மஸ்க்கின் பரபரப்பு பேச்சு!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் அமெரிக்காவில் அடுத்தடுத்து மர்ம பொருள்கள் வான் பரப்பில் தோன்றி வரும் நிலையில் அவர், “எனது ஏலியன் நண்பர்கள் தான் வந்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு அமெரிக்கா வான்பரப்பில் முன்னர் மர்ம பலூன்கள் பறந்த நிலையில் அதை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர் அந்த பலூன் சீனாவின் உளவு பலூன் என்று கூறப்பட்டது என்பதும், ஆனால் சீனா அதை மறுத்தது. இதையடுத்து […]

Continue reading …