Home » Archives by category » உலகம் (Page 39)

ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் மீது தாக்குதல்!

Comments Off on ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் மீது தாக்குதல்!

இன்று திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் மீது மூன்று இடங்களில் ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் காரணமாக கீவ் நகரில் உள்ள […]

Continue reading …

அமெரிக்காவின் அறிவுரை!

Comments Off on அமெரிக்காவின் அறிவுரை!

அமெரிக்க அரசு பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆள் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகமாகி வருகிறது. வெளிநாட்டு பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளதால் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், கைபர் ஆகிய மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம். அங்கு செல்ல வேண்டிய பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]

Continue reading …

மோடி உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடல்!

Comments Off on மோடி உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடல்!

பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறிய நாடான உக்ரைனுடன் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இப்போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. சமீபத்தில், உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புதின் அறிவித்தார். ஏற்கனவே, உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் […]

Continue reading …

மோசடி கும்பலில் சிக்கிய தமிழர்கள் மீட்பு!

Comments Off on மோசடி கும்பலில் சிக்கிய தமிழர்கள் மீட்பு!

தொழில்நுட்ப மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் மியான்மரிலிருந்து இன்று தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் ஐடி துறையில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, ஏஜெண்டுகள் மூலமாக இந்திய ஐடி பணியாளர்கள் பலர் தாய்லாந்திற்கு பதிலாக மியான்மருக்கு கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொண்டு டிஜிட்டல் மோசடி செயல்களில் அவர்களை ஈடுபடுத்தியதாகவும், 17 மணி நேரம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. […]

Continue reading …

ஜியோவின் அடுத்த அறிவிப்பு!

Comments Off on ஜியோவின் அடுத்த அறிவிப்பு!

ஜியோ இந்தியாவின் தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளது. ஆனால் தற்போது பட்ஜெட் விலையில் லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் 4ஜி சேவையோடு நுழைந்த ஜியோ நிறுவனம் அந்த சமயம் பிரத்யேக 4ஜி ஸ்மார்ட்போன்களை அன்லிமிடட் டேட்டா வசதியுடன் வழங்கியது. தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் […]

Continue reading …

ஜப்பான் விடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பு!

Comments Off on ஜப்பான் விடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பு!

மக்களுக்கு ஜப்பான் கொடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மீது வடகொரியா போர் தொடரும் ஆபத்து உள்ளதாக நாட்டு மக்களை ஜப்பான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகொரியா முன்பு இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை […]

Continue reading …

செயல்பாட்டை நிறுத்தியது மங்கள்யான்!

Comments Off on செயல்பாட்டை நிறுத்தியது மங்கள்யான்!

மங்கள்யான் விண்கலம் செயலிழந்து விட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 2013ம் ஆண்டில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. செப்டம்பர் 2014ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் இஸ்ரோவின், இந்தியாவின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. பல நாடுகள் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பல பில்லியன்களை செலவு செய்து வரும் நிலையில் இஸ்ரோ ரூ.450 கோடியில் இந்த மங்கள்யான் திட்டத்தை […]

Continue reading …

நோபல் பரிசு அறிவிப்பு!

Comments Off on நோபல் பரிசு அறிவிப்பு!

2022ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சாதனை செய்தவர்களுக்கு இவ்விருதை நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டிற்கான முதல் அறிவிப்பாக மருத்துவத்துறையில் அழிந்துபோன ஹோமின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது சிறந்த கண்டுபிடிப்பதற்காக சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே […]

Continue reading …

ரஷ்யாவை புறக்கணித்த இந்தியா மற்றும் சீனா!

Comments Off on ரஷ்யாவை புறக்கணித்த இந்தியா மற்றும் சீனா!

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. கடந்த சில மாதங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது பல நாடுகளுக்கும் தெரிந்த விஷயமே. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் நான்கு உக்ரைன் நகரங்களில் உள்ளன. இந்த நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில் 96 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த நான்கு நகரங்களும் விரைவில் […]

Continue reading …

தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி!

Comments Off on தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி!

இன்று காலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள பள்ளியில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுத வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதுவரை 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்து இருந்தாலும் இன்னும் அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் […]

Continue reading …