Home » Archives by category » உலகம் (Page 44)

இன்ஸ்டாகிராமில் புது அறிமுகம்!

Comments Off on இன்ஸ்டாகிராமில் புது அறிமுகம்!

பணம் அனுப்புவதற்காக பல முறைகள் கையாளப்பட்டு வருகிறது. வங்கிகளின் மூலமாக மட்டுமல்லாமல் கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம். இனி வரும் காலங்களில் விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறையை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகளின் மூலமாக மட்டுமே பண மாற்றம் செய்ய முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது தனியார் செயலிகள் மூலம் பணம் அனுப்பலாம் என்ற நிலை வந்துவிட்டது. அவ்வகையில் […]

Continue reading …

உக்ரைன் பலி எண்ணிக்கை: ஐ.நா தகவல்

Comments Off on உக்ரைன் பலி எண்ணிக்கை: ஐ.நா தகவல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையேயான போர் 150 நாட்களை நெருங்கி உள்ளது. சிறிய நாடான உக்ரைன் மீது மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா போர்தொடுத்து பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக உக்ரைன் ராணுவ வீரர்களும் செயல்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்தும் ரஷியா உக்ரைன் மீதான போரிலிருந்து பின்வாங்கவில்லை. போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை உக்ரைனில் பொதுமக்கள் 5,110 உயிரிழந்துள்ளனர். 6,752 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரஷ்யா […]

Continue reading …

ஹைபர் சோனிக் ஏவுகணை!

Comments Off on ஹைபர் சோனிக் ஏவுகணை!

ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனையிட்டது அமெரிக்கா. அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவில் நடக்கிறது. விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் முன்னிலையில் உள்ள நாடு அமெரிக்கா. தற்போதுஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் செல்லும், ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டிற்குப் பின், அமெரிக்கா நடத்திய 3 வது ஹைபர் சோனிக் ஏவுகணை இதுவாகும். இவ்வகை ஏவுகணை வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

பங்குச்சந்தை உயர்வு!

Comments Off on பங்குச்சந்தை உயர்வு!

பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் முதலீட்டார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம் முழுவதும் பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால், இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து உள்ளது. 54 ஆயிரத்து 175 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 125 புள்ளிகள் அதிகரித்து 16175 என வர்த்தகமாகி வருகிறது. […]

Continue reading …

எலான் மஸ்க்கின் வைரலாகும் ட்வீட்!

Comments Off on எலான் மஸ்க்கின் வைரலாகும் ட்வீட்!

எலான் மஸ்க் நாசா புகைப்படத்தை பங்கமாய் கலாய்த்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாசா சமீபத்தில் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. பூமியிலிருந்து பல லட்சம் கிலோ மீட்டர்கள் அப்பால் விண்வெளியில் நிலைக் கொண்டுள்ள இந்த தொலைநோக்கி பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளை படமெடுத்து அனுப்பி வருகிறது. நாசாவின் இப்புகைப்படம் குறித்து கிண்டல் செய்யும் விதமாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் சமையலறை ஒன்றில் போடப்பட்டுள்ள மார்பில் கல்லை ஜூம் செய்து […]

Continue reading …

தலாய்லாமா லடாக் விசிட்!

Comments Off on தலாய்லாமா லடாக் விசிட்!

4 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் புத்த மத தலைவர் தலாய் லாமா இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு 80 வயதாகிறது. இவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் தலாய்லாமா வருகைக்கு சீனா எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ கமாண்டர் அளவிலான உயர்மட்ட 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் […]

Continue reading …

பில்கேட்ஸின் அதிரடி முடிவு!

Comments Off on பில்கேட்ஸின் அதிரடி முடிவு!

பில்கேட்ஸ் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் நன்கொடையாக வழங்க முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பில் மற்றும் மெலிண்டா என்ற அறக்கட்டளையை பில்கேட்ஸ் ஆரம்பித்து அதற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். “எதிர்காலத்தில் எனது குடும்பத்திற்கு நான் என்னுடைய பணத்தை செலவழிப்பதை விட அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளேன். இதை நான் தியாகமாக நினைக்கவில்லை. உலக மக்கள் பெரும் சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இதை எனது கடமையாக நினைக்கிறேன்” என்று […]

Continue reading …

5ஜி அலை: ஏலம் யாருக்கு?

Comments Off on 5ஜி அலை: ஏலம் யாருக்கு?

வரும் 26ம் தேதி இன்டர்நெட் தொழில்நுட்பமான 5ஜி ஏலமிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலத்தில் 4 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களும் அதானி நிறுவனமும் விண்ணப்பம் செய்துள்ளன. 4.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 5ஜி அலைவரிசையை இந்த நான்கு நிறுவனங்களில் எந்த நிறுவனம் பெறும் என்பதை ஜூலை 26ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க […]

Continue reading …

தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சே!

Comments Off on தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சே!

பசில் ராஜபக்சே துபாய்க்கு தப்பி செல்ல முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் அரசின் செயலற்ற தன்மையால் மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், பிரதமர் ராஜபக்சே, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் வெளி நாடு தப்பிச் சென்றுள்ளதாகவும் […]

Continue reading …

நாசா வெளியிட்ட ஆச்சரியமான புகைப்படம்!

Comments Off on நாசா வெளியிட்ட ஆச்சரியமான புகைப்படம்!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுத்த முதல் புகைப்படத்தை நாசா இன்று வெளியிட்டுள்ளது. பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்கள் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தாலும், முன்னொடியாக திகழ்வது நாசாதான். விண்வெளியில் உள்ள கோள்கள், மற்ற அண்டங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆராய்வதில் நாசா பல காலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதற்காக நாசா முன்னதாக விண்வெளிக்கு அனுப்பிய ஹபிள்ஸ் டெலஸ்கோப் பல்வேறு கோள்கள், நட்சத்திரங்கள், நெபுலாக்கள், கேலக்ஸிகளை புகைப்படம் எடுத்து அனுப்பியது. கடந்த சில காலம் முன்னதாக நவீன […]

Continue reading …