
டுவிட்டரின் நிர்வாகக் குழு எலான் மஸ்க்கிடம் டுவிட்டர் நிறுவனத்தின் ஒப்புதலை வழங்கி உள்ளது. உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். டுவிட்டர் சமூக வலைதளத்தை ரூ.3.43 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். இதனால், உலகமே இது குறித்து பேசிக் கொண்டிருந்தது. டுவிட்டர் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. இந்நிலையில், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது டுவிட்டர் நிர்வாகக் குழு. ஏற்கனவே, டுவிட்டர் நிறுவனத்தில் அதன் […]
Continue reading …
நேற்று இரவு பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பாக்திக்கா மற்றும் கோஸ்ட் நகரத்தின் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலக்கடுக்கம் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் அதிகளவில் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மவ்லாவி ஷபருதின் அளித்த தகவலில், இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 610க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு […]
Continue reading …
எலான் மஸ்க் டுவிட்டரில் லைக் பதிவின் போது கலர் மாறுகிறதா என்று பதிவிட்டுள்ளார். 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டரை வாங்க தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. டிவிட்டரில் 20 முதல்- 50 சதவீதம் வரையிலான போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த போலி கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் டிவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால், 5 சதவீதத்திற்கும் குறைவாகவே […]
Continue reading …
40 சதவீதம் மக்கள் தொகையை சீனா ஒவ்வொரு தலைமுறையிலும் இழக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பணக்காரர்களின் முக்கியமான எலான் மஸ்க் வெளியிடும் பல அறிக்கைகள் விவகாரமாகவே அமைகிறது. அவ்வகையில் மக்கள் தொகை பற்றிய அவரது கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவகிறது. அதை கட்டுப்படுத்த பலரும் பேசி வரும் நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயல்வது மக்கள்தொகை வீழ்ச்சியோடு நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். […]
Continue reading …
அமைச்சர்களுக்கு இனி சம்பளமில்லை என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார திண்டாட்டத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். புதிதாக பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றதும் செலவினங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு ஆண்டிற்கு ஊதியமில்லாமல் பணிபுரிய அமைச்சர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சர்களே முன் வந்து தங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து இலங்கையில் இனிமேல் அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை என்பது உறுதி […]
Continue reading …
பக்தி யாத்திரைக்கான பயணத்தில் பேருந்து கட்டுப்பாடிழந்ததால் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோவிலுக்கு நேற்று மாலை பக்தர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து பேருந்தில் சர்தாம் புனித யாத்திரை பயணமாகி உள்ளனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேரில் 22 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 […]
Continue reading …
ஸ்காட்லாந்தில் நிலநடுக்கம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கு எலிகளை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் பேரிடர் நடக்கும் இடத்தில் மக்கள் இருக்கும் இடத்தை அறிவதற்கு எலிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். நிலநடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும், தொழில்நுட்ப தவறுகளாலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து விழும் சம்பவங்கள் அனைத்து நாடுகளிலும் நடந்து வருகின்றன. இவ்வாறாக கட்டிடங்கள் இடியும்போது மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது மீட்பு குழுவுக்கு சவாலான காரியமாக இருந்து […]
Continue reading …
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு நபிகள் நாயகம் குறித்து பேசியவர் மீது நடவடிக்கை எடுத்த பின்பும் உள்நோக்கத்துடன் பேசுவதாக இந்தியா அறிவித்துள்ளது. சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்ய தொடங்கினர். பாஜக இதுகுறித்து விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, மட்டுமல்லாமல் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை […]
Continue reading …
1000 மீட்டர் உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்ட திட்டமிட்டுள்ளது. இக்கட்டிடம் புர்ஜ் கலீபாவை விட உயரமானது. 500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவில் புதிய கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயிலுள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடம் இதுவே என்ற பெருமை இக்கட்டிடத்திற்கு உண்டு. ஆனால், இதைவிட உயரமாக ஜித்தா கோபுரம் என்ற கட்டிடத்தை சவுதி […]
Continue reading …
சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும்- இன்ஸ்டாகிராமில் போன்றவைகளில் வெறுப்பான பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் தனது அறிவிப்பில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக்கில் 53,000 வெறுப்புப் பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டதாக கண்டறிந்துள்ளது. இது ஏப்ரல்- மற்றும் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 39% அதிகரித்துள்ளது.
Continue reading …