
நடிகர் சரத்குமார் அஜீத்தும் சூப்பர் ஸ்டார்தான் என்று பல்டியடித்து தற்போது பேசியுள்ளார். வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசினர். அப்போது பேசிய சரத்குமார் “சூர்யவம்சம் படத்தின் 175வது நாள் விழாவில் பேசும் போது விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் சொன்னேன். அப்போது அதைக் கேட்ட […]
Continue reading …
வருகின்ற ஜனவரி 11ம் தேதியன்று அஜீத்தின் “துணிவு” திரைப்படமும், விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் வெளியாக உள்ளன. நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் “வாரிசு” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நள்ளிரவில் இத்திரைப்படமும் ஜனவரி 11ம் தேதியே வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நடிகர்கள் ரசிகர்களும் ஆக்ரோஷமாக சமூகவலைதளங்களில் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரு படங்களுக்கும் ஸ்பெஷல் […]
Continue reading …
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளையொட்டி “துணிவு” திரைப்படத் தயாரிப்பாளர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சில ஆண்டுகளுக்கு முன் “ஸ்லம் டாக் மில்லியனார்” திரைப்படத்தில் அவர் சிறந்த இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்தியாவில் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்திய சினிமாவைத் தாண்டி, ஹாலிவுட்டிலும் இசையமைத்து வருகிறார். இன்று அவர் தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சினிமா கலைஞர்கள், அரசியல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட […]
Continue reading …
அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில் அவ்வப்போது கலந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்என்.ரவி பேசுவது கடும் விமர்சனர்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி “மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை “தமிழகம்” என்று அழைப்பதே சரியாக இருக்கும்” என தெரிவித்திருந்தார். ஆளுநரின் பேச்சுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஆளுங்கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணா தமிழ் நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள் என்று தொண்டர்களிடம் கூறியிருந்தார். அக்கட்சியின் […]
Continue reading …
உலகநாயகன் கமலஹாசன் மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதன் நினைவாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று அனுமதி கோரி உள்ளோம், விரைவில் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். […]
Continue reading …
டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான கருத்துக்களை பெற்றது. பழைய திரைப்படங்களில் அஜீத் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேடுள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரெயிலர் உறுதி செய்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி […]
Continue reading …
கிருத்திகா உதயநிதி “காதலிக்க அஞ்சக் கூடாது..’ என தனது மகனின் புகைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குனரும், அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், “காதலிக்கவோ, காதலை வெளியில் சொல்லவோ அஞ்சக்கூடாது. அது இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார். உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதியின் மகன் இன்பநிதி புகைப்படம் ஒன்றை சர்ச்சைக்குரிய வகையில் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வரும் நிலையில் அப்புகைப்படம் குறித்து தான் கிருத்திகா […]
Continue reading …
பஜ்ரங் தள் அமைப்பினர் குஜராத்தில் ‘பதான்’ திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு அல்லாமல் திரையரங்கில் வைத்திருந்த பேனர்களை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உட்பட பலரும் நடித்து தயாராகியுள்ள படம் ‘பதான்’. படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியானது. அதில் ’பேஷரம் ரங்’ என்ற பாடலில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடையில் வந்ததற்கு இந்து அமைப்புகள் கண்டனம் […]
Continue reading …
நடிகர் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்துள்ள பூஜா ஹெக்டே இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “முகமூடி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது “பீஸ்ட்” திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. இப்படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது சல்மான் கானுடன் “கிசி கா […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் அடுத்து இயக்கவிருக்கும் தளபதி 67 திரைப்பத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இத்திரைப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. “மாஸ்டர்” திரைப்படத்தின் தாமதத்தால் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Continue reading …