
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் 6 வில்லன்கள் அவருடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். “விக்ரம்“ படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் மற்றும் விஜய் இணையவுள்ள படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் […]
Continue reading …
இயக்குனர் மணிரத்னத்தின் “கடல்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவுதம் கார்த்திக். கவுதம் கார்த்திக் மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தாலும் வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் போனது. அவர் தற்போது ஒரு பிரபல நடிகையை காதலிப்பதாகவும், விரைவில் அவரை மணமுடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இவருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு படம் ஒன்றில் நடித்தபோது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் கவுதம் கார்த்திக் தற்பொது சிம்புவோடு “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார்.
Continue reading …
கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். திடீரென அப்படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கவுள்ள தெலுங்கு படமொன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு […]
Continue reading …
கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். இது திரையுலகத்தினரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அன்புசெழியன் உள்ளிட்ட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியானது. இச்சோதனையில் குறித்து, வருமான வரிசோதனை வெளியிட்ட அறிக்கையில், வருமான வரிச்சோதனையில், […]
Continue reading …
ஹிப் ஆப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படத்தில் அறிமுகமானவர் ஆத்மிகா. இவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து வைரலாகி உள்ளது. ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படம் அவருக்கு போதுமான அளவுக்கு கவனம் பெற்றுத் தரவில்லை. அடுத்தடுத்து வாய்ப்புகள் பெரியளவில் அமையவில்லை. தற்போது “காட்டேரி” படத்தில் நடித்துள்ளார். அப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சமீபத்தில் அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அப்பதிவில், “அதிர்ஷ்டசாலிகள் எளிதாக ஏணியில் ஏறி மேலே சென்றுவிடுகிறார்கள். மற்றவர்கள் பாத்துக்கொள்ளலாம்” என […]
Continue reading …
புதுச்சேரியைச் சேர்ந்த நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனரை வைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர். அஜீத்தின் ரசிகர்கள் அவரது 30 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்காக உள்ள ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் படம் வெளியீட்டின்போது பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். தனது ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்து விட்ட போதிலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார் அஜீத்குமார். நேற்று அஜீத்குமாரின் 30 ஆண்டு கால திரையுலக பயணம் கொண்டாடப்பட்டது. அஜீத் ரசிகர்கள் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த முன்னணி நடிகர் தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியடைந்ததால் தனது சம்பளத்தை பாதியாக குறைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியில் சூப்பர் ஸ்டாராக பல படங்களில் நடித்தவர் அக்ஷய் குமார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி, வசூலை குவித்தன. இதனால் இவரது கிராப் எகிறியதுடன் சம்பளமும் அதிகரித்தது. மூன்று கான் நடிகர்களுக்கு இணையாகச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த அக்ஷய்குமாரின் கடைசி ஹிட் படம் “லட்சுமி […]
Continue reading …
இந்தி நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட் செய்ததது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் மறுபடியும் அவரை நிர்வாண போஸ் தரும்படி பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தீபிகா படுகோனின் கணவரான ரன்வீர்சிங் கடந்த சில நாட்கள் முன்னதாக நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் தேசிய அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் அவர் ஆடையின்றி போஸ் கொடுத்ததை விமர்சித்தனர். தற்போது பிரபல விலங்குகள் நல அமைப்பான பீட்டா தங்களது விளம்பரத்தில் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் தருமாறு ரன்வீர்சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது. […]
Continue reading …
நடிகர் விஜய் சேதுபதி இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதைப் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்குபவர். அவர் இயக்கிய “பட்லாபூர்” மற்றும் “அந்தாதூன்” ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் “அந்தாதூன்” உலகளவில் புகழ்பெற்ற படம். இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் […]
Continue reading …
இயக்குனர் சிவாவின் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் “வணங்கான்’’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு பாலா, சூர்யாவுடன் இணைந்துள்ள இப்படத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. 2வது கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் சூர்யா பாலாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமுடன் இருப்பதாக […]
Continue reading …