ராம்சரண் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர். சமீபத்தில் இவர் நடித்து வெளியான “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் உலகளவில் பிரபலமானது. இயக்குனர் ஷங்கர் ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் “இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த […]
Continue reading …இன்று இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இத்திரைப்படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். படத்தொடக்க விழாவில் பேசிய தனுஷ் “நான் என் வாழக்கையில் இரண்டு பேரின் பயோபிக்கில்தான் நடிக்க […]
Continue reading …சமீபத்தில் வெளியான “மஞ்சும்மாள் பாய்ஸ்” திரைப்படம் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட செய்யாத அளவுக்கு 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான “மஞ்சும்மாள் பாய்ஸ்” படம் வசூல் சாதனை செய்துள்ளது மலையாள திரை உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் “மஞ்சும்மாள் பாய்ஸ்” திரைப்படம் மலையாளத்தில் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி வெளியானது. இத்திரைப்படம் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி இத்திரைப்படத்தில் கமல்ஹாசனின் […]
Continue reading …நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசுவது திமிர்த்தனம் என்றும் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசினார். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் “420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என […]
Continue reading …மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளதாகவும் இதனால் தமிழ் திரை உலகினர் பீதியாகி உள்ளனர். சாதிக்குடன் தொடர்பில் இருந்த மலேசிய பிரமுகர் தமிழ் திரையுலகில் பட விநியோகம் பைனான்ஸ் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் அவருக்கு இன்னொரு முகம் இருப்பதாகவும் அந்த முகம் குறித்து தான் தற்போது மத்திய போதை தடுப்பு […]
Continue reading …நடிகர் ராதாரவி தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் பதிவான 1021 வாக்குகளில் ராதாரவி 662 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு […]
Continue reading …சமீபத்தில் டில்லியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இன்று சென்னை அழைத்து வரப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் மூன்று தமிழர்கள் போதைப் பொருளுடன் கைதானார். இக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் அவர் டில்லியில் கைது செய்யப்பட்டார். அவரை […]
Continue reading …“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி […]
Continue reading …சமீபத்தில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்திருந்தார். அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்துக்குப் பிறகு அவர் இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்றும் அதன் பின்னர் முழுக்க முழுகக் பொதுவாழ்வில் இறங்கப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு படத்துக்கு சம்பளமாக பெறும் விஜய், திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக எடுத்துள்ள இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக […]
Continue reading …நடிகர் ஆரி அர்ஜுனன், தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக, எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். நடிகர் ஆரி அர்ஜுனன் இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகிறார். தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். […]
Continue reading …