நடிகை அமலா பால் “சிந்து சமவெளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் “மைனா” படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவரானார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார். தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல […]
Continue reading …“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. நேற்று இத்திரைப்படத்தின் […]
Continue reading …ஜனவரி 19ம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 29ம் தேதி அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் […]
Continue reading …முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை உள்ளிட்ட பன்முகக் கலைஞராக பணியாற்றியவர். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு […]
Continue reading …அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில், அஜீத்துடன் திரிஷா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வருகின்றனர். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி நடந்து வந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும், 2வது கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, அஜீத், “மார்க் ஆண்டனி” ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]
Continue reading …சமூக வலைதளங்களில் பிரபல நடிகை ரம்பா தான் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறிய சம்பவங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமானவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்தவர், தற்போது திருமணமாகி குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டிக் கொடுத்த ரம்பா, தான் அருணாச்சலம் படத்தில் ரஜினியோடு நடித்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார். அருணாச்சலம் படத்தில் ஒரு […]
Continue reading …ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை […]
Continue reading …நடிகை திரிஷா பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. நடிகை திரிஷா சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன் 1,” “பொன்னியின் செல்வன் 2,” “லியோ” ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. நடிகர் அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கவுள்ளார். […]
Continue reading …நடிகர் ரஜினிகாந்த் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். ராமருக்காக உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணி நடந்து வந்தது. அதன் கட்டுமான பணிகள் தற்போது முழுவதுமாக முடிந்துள்ளது. அதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகளும், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றது. அயோத்தி, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு […]
Continue reading …இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “தர்பார்” திரைப்படத்தின் தோல்வியால் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். அவர் அக்ஷய் குமார் மற்றும் ஒரு குரங்கை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. இதனால் மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை “ஸ்பைடர்” படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க […]
Continue reading …