கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியான திரைப்படம் “சர்தார்.” இத்திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. தீபாவளிக்கு ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யப்படவில்லை. இப்போது “சர்தார் 2” படத்துக்கான வேலைகளை இயக்குனர் மித்ரன் தொடங்கியுள்ளதாகவும், ஷூட்டிங் […]
Continue reading …சந்தீப் ரெட்டி வங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து அனிமல் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இத்திரைப்படம் வசூலில் இந்தியா முழுவதும் கலக்கி வருகிறது. முதல் நாளில் 116 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இத்திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் குறையாமல் வசூல் வேட்டை நடத்தியது. படம் […]
Continue reading …கடந்த சில ஆண்டுகள் நடிகர் ஷாருக் கானுக்கு மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் பிளாப்பாகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023ம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீசான “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டானதோடு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய “டன்கி” திரைப்படம் நேற்று ரிலீசானது. படம் […]
Continue reading …சென்னை ஐகோர்ட் நடிகை திரிஷா உள்ளிட்ட 3 பேர் மீது மானநஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்ட நடிகர் மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில வாரங்களுக்கு முன், நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து திரிஷா தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை அடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால் திடீரென […]
Continue reading …கடந்த சில வருடங்களாக மார்கழி மாதம் என்றாலே கர்நாடக சங்கீத கச்சேரிகள் என்றிருந்ததை மாற்றி மக்களிசை பாடல்களுக்கென நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி செய்து வருகிறது பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் கடந்தாண்டுகளில் இந்நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இந்தாண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கேஜிஎஃப் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ளதாக இயக்குனர் ரஞ்சித் அறிவித்துள்ளார். கேஜிஎஃப் பகுதியில் டிசம்பர் 23ம் தேதியும், ஓசூரில் டிசம்பர் 24ம் தேதியும் நடக்க உள்ளது. […]
Continue reading …நடிகர் வடிவேலு “திட்டுபவர் திட்டட்டும் அரசு தன் கடமையை சிறப்பாக செய்கிறது” புகழாரம் சூட்டுகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் பசுமை சைதை திட்டத்தின் கீழ் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் சைதாப்பேட்டை தொகுயில் 5000 மரங்களை நடும் நிகழ்வு சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்து பேசியபோது, “தமிழ்நாடு அரசு பல சோதனைகளை சந்திக்கிறது எனவும் சென்னையில் […]
Continue reading …நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவின் முன்னணியில் உள்ளவர். இவர் “பேஷன்,” “குயின்,” “தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்,” “ஜான்சி ராணி,” தமிழில் “தலைவி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “சந்திரமுகி 2” திரைப்படத்தில் சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மாதவனுடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சமீப காலமாகவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் நடிகை கங்கனா ரனாவத், பாஜகவுக்கு ஆதரவாளராக இருந்து வருவதாகவும் […]
Continue reading …எழுத்தாளர் தேவிபாரதி தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார். அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்செய்தியில், “நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டு கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது. தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார் தேவிபாரதி. சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் […]
Continue reading …இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் முதல் முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இதை அறிவித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தை கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு […]
Continue reading …ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை,” “தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து அஜீத்தை வைத்து தொடர்ச்சியாக “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” ஆகிய படங்களை இயக்கினார். “துணிவு” திரைப்படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. இப்போது கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் “கல்கி” படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம். […]
Continue reading …