
சின்மயி “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அத்திரைப்படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு எச்சரிக்கை பதிவு வைரலாகி வருகிறது. அதில் “என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஜிழிணிஙி போலி மெஸேஜ் மூலமாக மொத்த […]
Continue reading …
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால், இத்தம்பதியரின் 17 வயது மகன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதன்பின், ஆசிரியர்கள் இவரது பெற்றோருக்குத் தொடர்பு கொண்டு மாணவனை பள்ளிக்கு அனுப்பும்படி கூறியுள்ளனர். பின், பள்ளிக்குச் சென்ற அவரிடம் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் கேட்டதற்கு, சில […]
Continue reading …
இயக்குனர் மாரி செல்வராஜ் நெல்லை நாங்குநேரியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல் குறித்து தனது டுவிட்டரில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். நெல்லை நாங்குநேரியிலுள்ள பள்ளியில் ஜாதி ரீதியான மோதல் காரணமாக ஒரு மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான மாமன்னன் உள்பட ஒரு சில படங்களை இயக்கிய […]
Continue reading …
சென்னை எழும்பூர் நீதிமன்றம் கமல்ஹாசன் நடித்த “சலங்கை ஒலி,” “தசாவதாரம்” உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது. நடிகை ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் அவர் செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்ட நிலையில் […]
Continue reading …
“சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். “சந்திரமுகி” முதல் பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். 2ம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ளது. படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி […]
Continue reading …
இன்று ரஜினியின் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் உலகம் முழுதும் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீசான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” படம் இன்று உலகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. […]
Continue reading …
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்”. படம் உலகம் முழுதும் இன்று ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “மது […]
Continue reading …
“ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் திரைப்படத்தைப் பார்க்க வந்த விஜய் ரசிகர் ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கினர். சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் காலை 9 மணிக்கு “ஜெயிலர்” படத்தைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ரஜினி ரசிகர்கள் முதல்நாள் முதற்காட்சியை காண ஆர்வத்துடன் தியேட்டருக்குள் சென்றனர். இப்படத்தைப் பார்க்க இதே தியேட்டருக்கு விஜய் ரசிகர்களும் வந்துள்ளனர். இப்படத்தைப் பார்த்துக் […]
Continue reading …
இன்று உலகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. “ஜெயிலர்” படம் காலை 9 மணிக்குத்தான் முதல் ஷோ ஆரம்பமானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் என்ன ரெஸ்பான்ஸ் உள்ளது? படம் எப்படி உள்ளது? […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் இவ்வாண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்போது திடீரென “லியோ” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக […]
Continue reading …