
“ஜப்பான்” திரைப்படத்தில் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் “ஜப்பான்” படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீசாகும் என கூப்படுகிறது. இதில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாகவும், அவருக்குள் எம் ஜி ஆர் வந்துவிடுவது போன்ற சில பேண்டசி அம்சங்களும் […]
Continue reading …
கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த முதல் படமான “அறம்” விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உடனடியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கிறது எனப் படக்குழு அறிவித்தது. ஆனால் நயன்தாரா ஒத்துக்கொண்டு இருந்த சிலப் படங்களால் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை உருவானது. அதனால் அதற்கிடையே கோபி நயினார் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதியப்படம் ஒன்றை இயக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படம் முழுதாக முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்க, இப்போது […]
Continue reading …
உதயநிதி ஸ்டாலின், “ஏழாம் அறிவு” திரைப்படத்தில் இடம் பெற்ற இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சைக்குரிய வசனத்தை நடிகர் சூர்யா நீக்க சொன்னதாகவும் அப்போது எனக்கு அரசியல் புரிதல் இல்லாததால் அதை நீக்காமல் விட்டுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி, “கடந்த 2011ம் ஆண்டு “ஏழாம் அறிவு” திரைப்படத்தை பார்த்துவிட்டு அதில் இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் இருக்கும் வசனத்தை நீக்க சொல்லி நடிகர் சூர்யா என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போது எனக்கு […]
Continue reading …
உதயநிதி மற்றும் வடிவேலு நடித்துள்ள “மாமன்னன்” திரைப்படத்தை வெளியிடும் திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பு நிறுவனத்தினால் அதிருப்தியடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “மாமன்னன்” திரைப்படத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” திரைப்படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். படம் ஜூன் மாதம் 29ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை […]
Continue reading …
ரூ.15 கோடி வாங்கியதாக ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் ஆர்கே சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமாகி உள்ளது. மேலும் 500 முகவர்களுக்கு சம்மன் […]
Continue reading …
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மின்வெட்டு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் “சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக அதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தற்போது நகர் முழுவதும் மின்சாரத் துறையின் பணிகள் நடந்துகொண்டு வருகிறது. இதனால் குறைந்தபட்ச இடையூறுகளை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் உங்கள் பகுதியில் […]
Continue reading …
“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இத்திரைப்படத்துக்காக நீளமாக தாடி மற்றும் முடிவளர்த்து மற்ற படங்கள் எதிலும் நடிக்காமல் சில மாதங்களாக நடித்து வருகிறார் தனுஷ். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
Continue reading …
இயக்குநராக தனுஷ் தன்னை நிரூபித்த திரைப்படம் “பவர் பாண்டி”. அடுத்து தனது 50வது படத்தை தானே இயக்கவ-ள்ளார். இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை முடித்ததும் இந்த படத்தை தனுஷ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் […]
Continue reading …
நடிகர் அஜீத்தின் மச்சினியும், நடிகை ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி “வீர சிவாஜி” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் “அஞ்சலி” உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் “வீரசிவாஜி” படத்துக்கு பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. போட்டோகிராபியில் ஆர்வமாக இருந்தார். இப்போது அவர் தன்னுடைய புகைப்படங்களை எல்லாம் சென்னையில் கண்காட்சியாக வைத்துள்ளார். அதில் ஷாலினி அஜீத் தன்னுடைய குழந்தைகளோடு கலந்துகொண்டார். மேலும் மணிரத்னம், சுஹாசினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் […]
Continue reading …
விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு படத்தில் விஜய்யின் நண்பர் வேடம் என்றும் வில்லன் சஞ்சய் தத்துக்கு தம்பியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டியோவில் விஜய்யும் அர்ஜுனும் இளமையான தோற்றத்தில் மோதிக் கொள்ளும் ஆக்ஷன் காட்சிகளை சமீபத்தில் லோகேஷ் படமாக்கினார். இப்போது “லியோ” திரைபடத்தில் அர்ஜுனின் கெட்டப் பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நீளமான தலைமுடி மற்றும் தாடியோடு இருக்கும் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக, இதுதான் […]
Continue reading …