
ஆளுநருக்கு எதிராக திருச்சியில் கருப்பு கொடி. திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தர உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக சி.பி.எம் கட்சியினர் திருவானைக்காவல் சந்திப்பு அருகே கருப்பு கொடி காட்டி, அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Continue reading …
நெல்லையில் மீண்டும் பரபரப்பு. பந்தல் ராஜா ஒட்டிய வால் போஸ்டர் ஒட்டுமொத்த வெள்ளாளர் சமுதாய மக்களும் திமுக க்கு எதிரான மனநிலைக்கு திரும்புகிறார்களா? தொடர்ந்து ஆ ராசா அவர்களின் சர்ச்சை பேச்சால் திமுகவுக்கு நெருக்கடிகள் தொடர்கிறது. நெல்லையில் வெள்ளாளர் சமுதாய மக்கள் மத்தியில் பிரபலமாக வளர்ந்து வரும் தலைவர் பந்தல் ராஜா. வெள்ளாளர் மக்களுக்கு ஒன்று என்றால் முதலில் களமிறங்கி அரசை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கண்டன வால் போஸ்ட் ஆர்ப்பாட்டங்கள் செய்யக்கூடிய படைகளுக்கு சொந்தக்காரர் பந்தல் […]
Continue reading …
தி.மு.க எம்.பி ராசாவை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம். பந்தல் ராஜா அழைப்பு. கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், தேசிய தலைவர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்தி பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பேச்சாளர் 2ஜி ராசா மீதும், தொடர்ந்து சர்ச்சை பேச்சுகளை பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் திமுகவை கண்டிக்கும் விதமாக திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் […]
Continue reading …
சாலைப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவர் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா வரவேற்றார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சாலை பாதுகாப்பு குறித்து துவக்க உரையாற்றினார். சாலை பணியாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான அய்யாரப்பன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு […]
Continue reading …
காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி புதுச்சேரியில் தமிழிசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை தோல்வியடைய தீவிர முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். தற்போது புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் புதுவை தொகுதியை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. புதுவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றால் அவர் அமைச்சராகவும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுவை தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் […]
Continue reading …
கோவை விமான நிலையத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முடித்து விட்டு மும்பை செல்வதற்காக வந்தார். மும்பையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி கோவையிலிருந்து கிளம்பினார். கோவை விமான நிலையம் வந்த அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் செல்லும் பொழுது அவரை மட்டும் உள்ளே அனுமதித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உடன் […]
Continue reading …
நடிகர் விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் வெற்றி பெற உண்மையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனும் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை அவர் பதிவு செய்ததோடு, வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகர் விஜய் […]
Continue reading …
கடந்த சில வாரங்களாகவே பூண்டின் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ பூண்டு சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பாரம்பரிய சந்தையில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய சந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் சேத்தியாத்தோப்பில் இயங்கி வருகிறது. இச்சந்தையின் சிறப்பு அம்சமே இங்கு விற்பனையாகும் பொருட்கள், காய்கறிகள் எப்போதும் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதுதான். ஆனால் இப்படிப்பட்ட சந்தையிலேயே ஒரு கிலோ பூண்டின் விலை 450-லிருந்து 510 ரூபாய் […]
Continue reading …
கடந்த 10 ஆண்டுகளாக கரூர் அருகே மணவாசி சுங்கச்சாவடி முறைகேடாக செயல்படுவதாக கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சுங்கச்சாவடி ஊழியர்களே முறையான ஆவணங்களை காட்டி 4 வழிச்சாலையை முடிக்காமல் செயல்படுவதாக ஒப்புக்கொண்டனர். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி அருகே சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சாலை சுங்காலியூர் முதல் குளித்தலை வரை 4 வழிச்சாலை அமைத்து தான் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கின்ற […]
Continue reading …
அகில இந்திய மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு 43 வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் 200 மீட்டர் (4X100) தொடரோட்டப் போட்டியில் தங்க பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை […]
Continue reading …