
திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் தர முயற்சி: மூவர் கைது. நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனியார் நிறுவன இயக்குனர் அசோக் குமார் மற்றும் அவரது மேலாளர் சக்திவேல் உதவியாளர்கள் ஆனந்த் பாபு , முகமது உனீஷ், ஆகியோர் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்ததாக கூறி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுபம் தாக்கரே ஞான தேவ்ராவ் காவல்துறையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதையடுத்து சக்திவேல் , […]
Continue reading …
தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில், அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு. தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேசன் எனப்படும் ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கண்ணன், மாநில அமைப்பாளர் மார்ட்டின் தேவதாஸ், செயலாளர் மரியதாஸ் ,தமிழ்நாடு மருத்துவ ஆய்வு கூட நுட்புனர் சங்க மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் […]
Continue reading …
திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் மனுக்கள் தொடர்பான உறையூரில் மேயர் அன்பழகன் ஆய்வு. குறைகளுக்கு உடனடி நடவடிக்கை. திருச்சி மாநகராட்சியில் வாரந்தோறும் திங்கள் கிழமை மேயர் மு.அன்பழகன ன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக மேயரிடம் கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் மேயர் மாநகராட்சி அலுவலர்களுடன் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்களுடன் உரிய களஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி […]
Continue reading …
தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம். தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்தவும், சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வணிகக் குழு எனப்படும் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்திடவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக கூடுதல் அடாவடி வசூல் செய்வதை கைவிட வேண்டும் மேலும் டெண்டர் முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தரைக்கடை வியாபாரிகள் மீதான அடக்குமுறையை மேற்கொள்ளும் காவல்துறை […]
Continue reading …
அறிவியலை கொண்டாடுவோம் மாநாட்டில் திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் 4 பேருக்கு விருது. அறிவியலை கொண்டாடுவோம் மாநாட்டில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 பேருக்கு கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.. நிகழாண்டு 2024 ஆம் ஆண்டுக்கான அறிவிலைக் கொண்டாடுவோம் மாநாடு சேலத்தில் டார்வின் அறிவியல் கழகம் சார்பில் பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏராளமான ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர். […]
Continue reading …
திருச்சியில் தெய்வ தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பேட்டி: கடலூர் மாவட்டம் வடலூரில் சத்ய ஞான பெருவெளியில் வள்ளலாருக்கு பன்னாட்டு ஆய்வு மன்றம் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் அந்த ஆய்வு மன்றத்தை பெருவெளியில் அமைக்க கூடாது மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 20 ஆம் தேதி தெய்வ தமிழ் பேரவை சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பழனி முருகன் கோவிலில் மாற்று மதத்தவருக்கு அனுமதி […]
Continue reading …
கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் பெண் சடலம். திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன் குமார் ஆகியோர் விரைந்து வந்தனர். கொள்ளிடம் பாலத்தின் ஆற்றின் நடுபகுதியில் பாதி எரிந்த அழுகிய நிலையில் இருந்த பெண் […]
Continue reading …
தேனியில் மாவட்ட போலீசார், தனியார் நிறுவனம் சார்பில் நேற்று நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானில் பரிசு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் வீரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போட்டியில் பங்கேற்ற இரு சிறுமிகள் மயங்கி ரோட்டில் விழுந்தனர். தேனி பெரிக்ஸ் அகாடமி’, போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பிப். 4ல் (நேற்று) நடத்துவதாக விளம்பரம் செய்தனர். நுழைவு கட்டணமாக ரூ.300 வசூலித்தனர். […]
Continue reading …
பாளையங்கோட்டையில் கூலித்தொழிலாளியை அரிவாளாள் வெட்டிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இலந்தை குளம் பகுதியைச் சோ்ந்த தளவாய் மகன் அங்கப்பன் (49). கூலித்தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டியதாம். பலத்த காயமடைந்த அங்கப்பனை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி […]
Continue reading …
தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கான 3சதவீத இட ஒதுக்கீட்டில், கூடோ போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு தலைமைப் பயிற்சியாளர் திருச்சியில் பேட்டி. தமிழ்நாடு மாநில அளவிலான கூடோ விளையாட்டு பயிற்சி முகாம், கூடோ தேசிய அளவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா, கூடோ தேசிய போட்டிக்கும், மாநில அளவிலான போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு போட்டிகள் மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கூடோ விளையாட்டுச் சங்க சேர்மன் தங்க.நீலகண்டன் […]
Continue reading …