Home » Archives by category » தமிழகம் (Page 114)

சபரிமலை தேவசம்போர்டின் அறிவிப்பு!

Comments Off on சபரிமலை தேவசம்போர்டின் அறிவிப்பு!

சபரிமலையில் ஜனவரி 15 அன்று நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்கள் தங்க தடையில்லை என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மார்கழி மாதம் ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தொடங்கும் மண்டல பூஜை அதையொட்டிய மகரஜோதி தரிசனத்திற்காக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இருமுடிக் கட்டி மலைக்கு வருவது காலம் காலமாக வழக்கமாக உள்ளது. ஆனால் இம்முறை கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வந்தபடியால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தது. கடந்த 10ம் தேதி முதலாக சபரிமலையில் நேரடி […]

Continue reading …

விஜயகாந்த் டுவிட்டர் கணக்கு பிரேமலதா பெயரில் மாற்றம்!

Comments Off on விஜயகாந்த் டுவிட்டர் கணக்கு பிரேமலதா பெயரில் மாற்றம்!

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். தற்போது அவருடைய பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கை தனது பெயருக்கு பிரேமலதா விஜயகாந்த் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்செயல் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு தற்போது பிரேமலதா விஜயகாந்த் என்று மாற்றப்பட்டதோடு அதுமட்டுமின்றி தேமுதிகவின் பொதுச்செயலாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமலதாவின் இச்செயல் குறித்து தேமுதிக தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். […]

Continue reading …

துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி?

Comments Off on துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி?

விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதற்கான பதிலை அவரே கூறியுள்ளார். உதயநிதி துணை முதலமைச்சராகப் போகிறார் என்ற செய்தி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியிருக்கிறது. 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன் திமுக இளைஞரணி செயலாளராக களம் இறங்கிய உதயநிதிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வென்றபோதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் […]

Continue reading …

செந்தில் பாலாஜிக்கு 15வது முறை காவல் நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜிக்கு 15வது முறை காவல் நீட்டிப்பு!

15வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமான பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி மூலம் […]

Continue reading …

சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு!

Comments Off on சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு!

ஆளுநர் சேலம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆளுநர் ஆர்.என் ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். துணை வேந்தர் ஜெகநாதனக்கு ஆளுநர் ஆதரவு தருவதை கண்டித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக ஆளுநரை கண்டித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன […]

Continue reading …

தமிழக அரசின் மீது செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!

Comments Off on தமிழக அரசின் மீது செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை செய்கிறது என்று செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்து இந்த அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஜூஜூபி என்றும் பழைய தகரத்திற்கு பாலிஷ் போடும் வேலையை தான் தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தமிழக அரசை […]

Continue reading …

குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!

Comments Off on குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே இன்று வெளியாகியுள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் முடிவுகளை பார்த்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்கள் மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் சுமார் 6000 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. இதற்கான முதன்மை முதல் நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த ஆண்டு 25ம் தேதி முதனிலை தேர்வுகள் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ […]

Continue reading …

ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம்: ஜவஹருல்லா!

Comments Off on ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம்: ஜவஹருல்லா!

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவஹருல்லா சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்து ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம் என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பயணித்தால் நாடாளுமன்றம் செல்லலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டு வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் நலன்களை பற்றி கூறும் வார்த்தைகளில் உண்மை துளியும் இருந்ததில்லை. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஜெயகுமார் கருத்து!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஜெயகுமார் கருத்து!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்தாண்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், “கட்சியிலிருந்து நீக்கிய பிறகும் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது’’ என எடப்பாடி பழனிசாமி […]

Continue reading …

திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

Comments Off on திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

பல ஆண்டுகளாக திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் […]

Continue reading …