Home » Archives by category » தமிழகம் (Page 116)

ஈரோட்டில் ரவுடிகளால் பரபரப்பு!

Comments Off on ஈரோட்டில் ரவுடிகளால் பரபரப்பு!

தலைமறைவாக இருந்த ரவுடிகளை பிடிக்க போலீசார் முயற்சித்தபோது அவர்கள் அரிவாளால் தாக்கியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன் மீது களக்காட்டில் நடந்த கொலை தொடர்பான வழக்கு உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடி சிவசுப்ரமணியனை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் சிவசுப்ரணியன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து திருநெல்வேலி தனிப்பிரிவு போலீசஸார் இன்று […]

Continue reading …

கோவையில் பழங்கால கார் கண்காட்சி!

Comments Off on கோவையில் பழங்கால கார் கண்காட்சி!

பழங்கால கார் கண்காட்சி கோவையில் நடைபெற்றது. இக்கண்காட்சியை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் காட்சி படுத்தப்பட்டன. கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து கார்களில் அமர்ந்து […]

Continue reading …

வரியை விட அதிகமாக நிதி கொடுத்துள்ளோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Comments Off on வரியை விட அதிகமாக நிதி கொடுத்துள்ளோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டில் இருந்து கிடைத்த வரியை விட அதிகமாக தமிழகத்திற்கு நிதி கொடுத்துள்ளோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தான் அதிக வரி கொடுக்கப்படுகிறது, ஆனால் தமிழகத்திற்கு குறைவான நிதிதான் வழங்கப்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தில், “தமிழகத்திற்கு மத்திய அரசால் 2014ம் ஆண்ட்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ.2,88,627 கோடி. இதில் மானியமாக […]

Continue reading …

“வந்தே பாரத்” முதல் முறை நாகர்கோவிலில்!

Comments Off on “வந்தே பாரத்” முதல் முறை நாகர்கோவிலில்!

சென்னை முதல் நாகர்கோவில் வரை இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிதாக விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் வரை நீட்டிக்க வேண்டும் என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சார்பில் ரயில்வே துறை அமைச்சர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோரிக்கையை ஏற்று (ஜனவரி  4)ம் தேதி சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரயில் நீட்டிக்கப்பட்டது. இந்த இரயில் வாரம் ஒருமுறை வியாழக்கிழமை மட்டுமே இயக்கப்படுகிறது. நாகர்கோவில் வந்த […]

Continue reading …

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறாரா?

Comments Off on உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறாரா?

உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பிறகு துணை முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதல் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எம்.எல்.ஏவாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், முதலில் அமைச்சர் பதவிகளை ஏற்காவிட்டாலும் பின்பு அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சமீபகாலமாக திமுகவில் நடைபெறும் எந்நிகழ்ச்சியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து பிளெக்ஸ், பேனரிலும் அவரது படம் […]

Continue reading …

அமைச்சர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Comments Off on அமைச்சர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

இன்று சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா […]

Continue reading …

அமைச்சர் உதயநிதி பேட்டி!

Comments Off on அமைச்சர் உதயநிதி பேட்டி!

நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்தேன். இந்த விளையாட்டுப் போட்டி துவக்க விழாவுக்கு வருகை தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழை தந்தேன். முதலமைச்சரின் சார்பில் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்தையும் பிரதமரிடம் கொடுத்தேன். திருச்சியில் நடந்த விழாவின்போது முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் […]

Continue reading …

அங்கன்வாடி மேற்கூரை இடிந்து சிறுமி, பணியாளர் படுகாயம்!

Comments Off on அங்கன்வாடி மேற்கூரை இடிந்து சிறுமி, பணியாளர் படுகாயம்!

அங்கன்வாடி ஒன்றில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி, அங்கன்வாடி பணியாளர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். மதுரை முத்துப்பட்டியில், அங்கன்வாடி மையத்தில் மொத்தம் 23 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இன்று 13 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். இன்று காலை திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு குழந்தைகள் மற்றும் 47வயது மதிக்கதக்க ஒரு அங்கன்வாடி பணியாளர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு […]

Continue reading …

திமுவுக்கு கெடு விதித்த ஜவாஹிருல்லா!

Comments Off on திமுவுக்கு கெடு விதித்த ஜவாஹிருல்லா!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுகவுக்கு கெடுவிதித்துள்ளார். இதுகுறித்து அவர் “தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் திட்டிய மாநகராட்சி ஆணையாளர் அழகு […]

Continue reading …

கள்ளக்காதலைனை வைத்து கணவனை கொன்ற மனைவி!

Comments Off on கள்ளக்காதலைனை வைத்து கணவனை கொன்ற மனைவி!

வியாபாரி ஒருவர் சில நாட்களுக்கு முன் சென்னையில் மரணமடைந்த வழக்கு குறித்த விசாரணையில் அது விபத்து அல்ல கொலை என்று தெரிய வந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 37 வயதான பிரேம்குமார் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி சன்பிரியா. நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டிவிட்டு பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். போலீசார் வழக்குப்பதிவு […]

Continue reading …