Home » Archives by category » தமிழகம் (Page 118)

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரஜினிகாந்த்துக்கு அழைப்பு!

Comments Off on ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரஜினிகாந்த்துக்கு அழைப்பு!

நடிகர் ரஜினிகாந்த் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். ராமருக்காக உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணி நடந்து வந்தது. அதன் கட்டுமான பணிகள் தற்போது முழுவதுமாக முடிந்துள்ளது. அதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகளும், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் விடுக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றது. அயோத்தி, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு […]

Continue reading …

காவல் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Comments Off on காவல் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

தமிழக அரசு 19 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தோடு, 7 பேர் டிஐஜி பதவியிலும் 10 பேர் எஸ்பி பதவிகளும் நியமனம் செய்துள்ளது. நேற்று தமிழக அரசின் உள்துறை செயலர் பி.அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனந்த் குமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐஜி பதவியில் இருந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் வி.ஜெயா, பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய […]

Continue reading …

அரசுப் பள்ளிகளுக்கு கலைஞர் பெயர்!

Comments Off on அரசுப் பள்ளிகளுக்கு கலைஞர் பெயர்!

தமிழக அரசு தமிழகத்திலுள்ள 6,218 அரசுப் பள்ளிகளில் செயல்படும் தமிழ் மன்றங்களுக்கு கலைஞர் பெயர் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பில், “ஓங்கலிடைப் பிறந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழின் ஆற்றலையும், ஆகச் சிறந்த இளமைத் திறத்தையும் பச்சிளம் பயிர்களாகிய பள்ளிப் பிள்ளைகள் அறியவும்; நினையவும், தமிழார்வமும், தமிழுணர்வுமுடையோர் தங்கள் தமிழாற்றலை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகத் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் பேருள்ளப் பெருந்தகைமையால் தமிழ்நாட்டு அரசு உயர்நிலைப் […]

Continue reading …

சென்னை வானிலை மையத்தின் தகவல்: மீண்டும் புயலா?

Comments Off on சென்னை வானிலை மையத்தின் தகவல்: மீண்டும் புயலா?

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு புயல் மிக்ஜாம் புயலாக மாறி சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. தற்போது இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 […]

Continue reading …

விஜய் நெல்லை மக்களை சந்திக்கிறாரா?

Comments Off on விஜய் நெல்லை மக்களை சந்திக்கிறாரா?

சமீபத்தில் நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மத்திய மற்றும் மாநில அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்து வருகிறது. நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளார். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்து நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா […]

Continue reading …

கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் அடக்கம்!

Comments Off on கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் அடக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ள விஜயகாந்தின் மறைவையொட்டி நாளை ஒருநாள் […]

Continue reading …

ஈரோடு நெல்லை தினசரி ரயில் சேவை!

Comments Off on ஈரோடு நெல்லை தினசரி ரயில் சேவை!

இந்திய ரயில்வே வாரியம் ஈரோடிலிருந்து நெல்லைக்கு தினசரி விரைவு ரயில் சேவை இனி செங்கோட்டை வரை நீடிக்கும் என்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ரயில் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், “ரயில் எண். 16846 திருநெல்வேலி – ஈரோடு எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஈரோடு சென்றடையும். […]

Continue reading …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

Comments Off on தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

நேற்றிரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பின்னடைவில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இத்தகவல் […]

Continue reading …

மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனைவில் அனுமதி!

Comments Off on மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனைவில் அனுமதி!

தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்பு சில நாட்களில் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கலந்து கொண்டாலும், அவர் அந்நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. மேலும் சுயநினைவின்றியே அவர் இருப்பது போலவே அந்த நிகழ்ச்சி முழுவதும் பிறர் உதவியோடு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் தேமுதிகவினர் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்தை வதைப்பதாகக் குற்றம் சாட்டினர். […]

Continue reading …

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!

Comments Off on தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!

நாளை காங்கிரஸ் கட்சி வருகிற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்க ஆரம்பித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில […]

Continue reading …