Home » Archives by category » தமிழகம் (Page 12)

பிராங்க் வீடியோவால் டிடிஎப் வாசனுக்கு சம்மன்!

Comments Off on பிராங்க் வீடியோவால் டிடிஎப் வாசனுக்கு சம்மன்!

யூடியூபர் டிடிஎப் வாசன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் அம்மாநில போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்த மாதம் விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாகச் சர்ச்சைக்குரிய கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎப் வாசன் வெளியே வந்திருந்தார். […]

Continue reading …

சண்டாளர் பெயரை பயன்படுத்தக்கூடாது; அதிரடி அறிவிப்பு!

Comments Off on சண்டாளர் பெயரை பயன்படுத்தக்கூடாது; அதிரடி அறிவிப்பு!

நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சண்டாளர் என்ற சாதி பெயரை கடந்த சில நாட்களாக பயன்படுத்தியதாக சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு சீமான் பதிலளித்தார். தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு ஒரு முக்கிய பரிந்துரையை செய்துள்ளது. இதன்படி சண்டாளர் என்று சாதி பெயரை பயன்படுத்த கூடாது என்றும் நகைச்சுவையாகவோ அரசியல் […]

Continue reading …

தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

Comments Off on தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தாத கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டில்லியில் ஜூன் 25ம் தேதி நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில், “தற்போது மேட்டூர் அணையில் 12.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் […]

Continue reading …

அமைச்சர் முத்துச்சாமி பேட்டி!

Comments Off on அமைச்சர் முத்துச்சாமி பேட்டி!

அமைச்சர் முத்துச்சாமி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம், “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.49 கோடி மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு […]

Continue reading …

ள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

Comments Off on ள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

11 வட்டாட்சியர்கள் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், வானபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 66 பேர் உயிரிழந்தனர். சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் […]

Continue reading …

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி!

Comments Off on விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி!

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் […]

Continue reading …

டாஸ்மாக்கில் மது அருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on டாஸ்மாக்கில் மது அருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி!

அரசு மருத்துவமனையில் திண்டிவனம் அருகே டாஸ்மாக்கில் மது அருந்திய விவசாயி உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் பகுதியில் முருகன் என்ற விவசாயி டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்ததிதாக கூறப்படுகின்றது. சிறிது நேரத்தில் அவருக்கு மார்பு வலி ஏற்பட்டதோடு கண் பார்வையும் குறைந்த நிலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது கூச்சலை கேட்ட உறவினர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மேல் […]

Continue reading …

திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

Comments Off on திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான திருமதி. முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் […]

Continue reading …

காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா; அன்புமணி ராமதாஸ்!

Comments Off on காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா; அன்புமணி ராமதாஸ்!

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய வசதியாக தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் ஒரு டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை, நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் […]

Continue reading …

பிரேமலதாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Comments Off on பிரேமலதாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதாவிற்கு அரசு நிர்வாகமும், அரசியலும் தெரியவில்லை என்றும் அரசு திட்டங்களை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை […]

Continue reading …