Home » Archives by category » தமிழகம் (Page 122)

லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Comments Off on லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து ஆர்டிஓ சோதனை சாவடிகள் மற்றும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் அளித்த பேட்டியில், “இந்தியா முழுக்க உள்ள சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். 16 மாநிலங்களில் இந்த சோதனை சாவடிகள் எடுக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் உள்ள […]

Continue reading …

நிதிஷ்குமார் பேச்சு குறித்து பாஜக கேள்வி!

Comments Off on நிதிஷ்குமார் பேச்சு குறித்து பாஜக கேள்வி!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், நேற்றைய இந்தியா கூட்டணியில் “ஹிந்தி ஒரு தேசிய மொழி, அதை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிதிஷ்குமார் பேச்சுக்கு அமைதியாக இருந்தது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜகவின் முக்கிய பிரமுகருமான நாராயணன் திருப்பதி இது குறித்து கூறும்போது, “ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் […]

Continue reading …

மகளுக்கு பாலியல் தொல்லை!

Comments Off on மகளுக்கு பாலியல் தொல்லை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை, தடாகத்தை சேர்ந்த வேலுச்சாமி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், “எனது மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் […]

Continue reading …

அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நிலை பாதிப்பு!

Comments Off on அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நிலை பாதிப்பு!

திடீரென உடல்நல குறைவால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக அமைச்சர் துரைமுருகனுக்கு சளி, இருமல் தொல்லை இருந்ததாகவும் இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துறைமுகத்திற்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் வழங்கி வருகிறார்கள். அவரது உடல்நலம் குறித்து அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்று அல்லது நாளை […]

Continue reading …

தமிழ்நாடு அரசு குறித்து ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Comments Off on தமிழ்நாடு அரசு குறித்து ஈபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு மத்திய அரசிடம் விளம்பரத்திற்காக நிவாரண தொகை கேட்டுள்ளது என தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி “வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வேளாண் வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 25000 ரூபாய் இழப்பீடு தரவேண்டும். சேதங்களை மதிப்பீடு செய்யாமல் நிவாரண தொகைகயை திமுக அரசு கேட்டுள்ளது. சேதத்தை கணக்கிடாமல் நாடாளுமன்றத்தில் 6000 கோடி ரூபாய் டி.ஆர்.பாலு […]

Continue reading …

தாமிரபரணி கரையோரத்தில் மீட்பு படை செல்வதில் தாமதம்

Comments Off on தாமிரபரணி கரையோரத்தில் மீட்பு படை செல்வதில் தாமதம்

இரு தேசிய பேரிடர் மீட்பு குழு தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளில் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் ஸ்ரீவைகுண்டம் நோக்கி செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளில் சுமார் 9 கி.மீ பயணிக்க வேண்டும். சாலைகள் கடும் சேதம் அடைந்திருப்பதல் அதில் பயணிப்பது கடும் சவாலாக உள்ளதாகவும் என்.டி.ஆர்.எஃப் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை சென்றடைய 5 என்டிஆர்எஃப் குழுக்கள் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் […]

Continue reading …

மாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை!

Comments Off on மாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை!

முன்னாள் தலைமை செயலர் இறையன்பு ஐஏஎஸ் மாணவர்கள் மின்னணு சாதனங்களின் உபயோகங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி தனியார் கல்லூரியில் கல்லூரி காலங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் கலந்து கொண்டு பேசியபோது, “மாணவர்கள் தங்களுக்கான முயற்சிகளை தாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பகட்டுத்தனம் மற்றும் ஆடம்பரம் ஆகியவை உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தாது. கடினமாக […]

Continue reading …

யாத்திரையை ஒத்தி வைத்த அண்ணாமலை!

Comments Off on யாத்திரையை ஒத்தி வைத்த அண்ணாமலை!

கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வந்தார். தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக யாத்திரையை ஒத்திவைத்துள்ளார். இதுகுறித்து அவர், “கனமழை காரணமாக தென்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பா.ஜனதா தென்மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம். பொதுமக்களுடன் தோளோடு தோளாக நின்று, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் களத்தில் நிவாரணப்பணிகளில் […]

Continue reading …

பேரிடரில் சிக்கியிருக்கிறது தமிழகம்; மாரி செல்வராஜ்

Comments Off on பேரிடரில் சிக்கியிருக்கிறது தமிழகம்; மாரி செல்வராஜ்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடர்வதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக […]

Continue reading …

அந்தரத்தில் தொங்கும் தூத்துக்குடி தண்டவாளம்!

Comments Off on அந்தரத்தில் தொங்கும் தூத்துக்குடி தண்டவாளம்!

கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் தாதன் குளத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் ரயில் தண்டவாளத்தின் அடித்தளம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தண்டவாளத்தில் சில பகுதிகள் அந்தரத்தில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும். ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் வரலாறு காணாத மழையால் நெல்லை அருகே கங்கை கொண்டான் – தாழையூத்து இடையிலான ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டது. வரலாறு காணாத […]

Continue reading …