
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் “தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை, 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கையே நடந்திருக்கிறது” என்று பேட்டியளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம். தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எங்களுக்கு திருப்தி […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3க்கு உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட் விலையை கடந்த சில மாதங்களாக உயர்த்தியுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினின் பால் பாக்கெட்டுகள் தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.22 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பால் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும், அனைத்து கால்நடைகளுக்கும் அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் […]
Continue reading …
பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்பட்டவர். அவர் ஏற்கனவே சரணடைந்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். பிரணவ் ஜுவல்லரி மீது சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்தது. தமிழ்நாடு முழுதும் அந்த கடைக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. இதில் கிலோ கணக்கில் நகை ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிதிலமடைந்த 10,000 பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். அண்ணாமலை அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து, ஐந்து குழந்தைகள், தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து மிகுந்த […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 17ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 17ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
Continue reading …
அரசு உயர்நிலை பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 17 மாணவ- மாணவியர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மழைக்காலங்களில் பெரிய மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது என்பதை அரசு முன்கூட்டியே அறிந்து அதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பள்ளிகளிலாவது அக்கறையோடு எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தெற்குத்தெரு அரசு உயர்நிலை பள்ளியில் மரம் வேரோடு […]
Continue reading …
தமிழ்நாடு அரசு முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவித்ததை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வு விரைவில் நடைபெற இருக்கும் இந்நிலையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதிப்பெண் குறைவாக இருப்பதாக மாணவர்கள் கருதினால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பம் செய்யலாம் […]
Continue reading …
காங்கிரஸ் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு உதயநிதி சனாதனம் குறித்து பேசியதே காரணம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து […]
Continue reading …
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று காலை காவலர்களுக்கும் பக்தர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு குறித்து கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இன்று முதல் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இன்று அமாவாசை என்பதால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். சபரிமலை யாத்திரை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் வரும் வழியில் உள்ள சிறப்பு மிக்க கோவில்களுக்கு சென்று […]
Continue reading …
மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் சென்னையை போன்று மதுரையை மாற்றி விடாதீர்கள் என கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை ஐகோர்ட் கிளை, “சட்ட விரோதமாக கட்டுமானம் கட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியற்ற கட்டடங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம், ஆனால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது, முறையற்ற கட்டிடங்களால் சென்னை போன்று மதுரையையும் மாற்றி விடக்கூடாது. அனுமதி ஏற்ற கட்டிடங்களால் மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ நேரிடுகிறது. மதுரை […]
Continue reading …