Home » Archives by category » தமிழகம் (Page 129)

விஜயகாந்துக்கு உடல்நிலை குறித்து மா.சுப்பிரமணியன் தகவல்!

Comments Off on விஜயகாந்துக்கு உடல்நிலை குறித்து மா.சுப்பிரமணியன் தகவல்!

அமைச்சர் மா சுப்பிரமணியன் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் மார்பு சளி மற்றும் இடைவிடாத இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்தாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “விஜயகாந்த் உடல் உபாதைகள் காரணமாக அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது படிப்படியாக தேறி வருகிறது. இருப்பினும் […]

Continue reading …

செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைக்குமா?

Comments Off on செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைக்குமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 10 முறை அவரது காவல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை டிசம்பர் நான்காம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் […]

Continue reading …

கைதான முரளிகிருஷ்ணனின் வாக்குமூலம்!

Comments Off on கைதான முரளிகிருஷ்ணனின் வாக்குமூலம்!

சமீபத்தில் சென்னை கொத்தவால்வாசடியில், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் முரளிகிருஷ்ணன் கைதானார். அவர் தற்போது பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம், “மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தினமும் மதுவுக்கு அடிமையகி தினமும் குடித்து வந்ததாகவும், அடிக்கடி தனது காதில் நீ உயிருடன் இருக்காதே என்று ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ‘வீட்டின் மேலே இருந்து குதித்து விடு தற்கொலை செய்துகொள் எப்படியாவதும் இறந்துவிடு’ என ஒரு குரல் […]

Continue reading …

திமுகவை விமர்சிக்கும் வானதி சீனிவாசன்!

Comments Off on திமுகவை விமர்சிக்கும் வானதி சீனிவாசன்!

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என கூறியிருந்தார். “திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று” என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வானிதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார். ஆனால் நடப்பதோ வேறு…. விழுப்புரம் மாவட்டம் […]

Continue reading …

மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா?

Comments Off on மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா?

சமீபத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியதால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மிதிலை என்ற புயலாக மாறி வங்கதேசத்தில் கரையை கடந்தது. தற்போது வங்கக்கடலில் வரும் 26ம் தேதி மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதன் காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் […]

Continue reading …

முதலமைச்சர் செய்தியாளரின் மறைவுக்கு நிதியுதவி!

Comments Off on முதலமைச்சர் செய்தியாளரின் மறைவுக்கு நிதியுதவி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரின் அறிக்கையில், “திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்டசெய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு. முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவுகங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, […]

Continue reading …

ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்!

Comments Off on ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்!

ஆவின் நிறுவனம் நவம்பர் 25 முதல் பச்சை நிற பால் விற்பனையை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டை தமிழகம் முழுதும் 25ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக பச்சை நிற பால் இருந்தது. இதில் 4.5 சதவீத கொழுப்பு சத்து இருந்தது, அதிக கொழுப்பு சத்து […]

Continue reading …

எஸ்பிஐ வங்கியில் பணியிடங்கள்!

Comments Off on எஸ்பிஐ வங்கியில் பணியிடங்கள்!

ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு குறித்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவிலேயே அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பல கிளைகளை கொண்ட வங்கியாகும். இதில் தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைக்கான ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்காக 8,424 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இட ஒதுக்கீட்டின்படி எஸ்.சி பிரிவினருக்கு 1,284 பணியிடங்கள், எஸ்.டி பிரிவினருக்கு 748 பணியிடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 1919 […]

Continue reading …

அமைச்சர் உதயநிதி பெருமிதம்!

Comments Off on அமைச்சர் உதயநிதி பெருமிதம்!

அமைச்சர் உதயநிதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனே கூட்டி, அந்த சட்ட முன்வடிவுகளை மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது ஜனநாயக பாதையில் மாபெரும் மைல்கல் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். நியமனப்பதவியில் அமரும் பாசிசத்தின் நிழலிடம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் அரசு ஒரு போதும் பின் வாங்காது என்பதற்கு உதாரணமே இந்த சிறப்புக்கூட்டம். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை அரசியலமைப்பின் மாண்புக்கு […]

Continue reading …

திமுக ஆட்சியின் லட்சணம்; சசிகலா!

Comments Off on திமுக ஆட்சியின் லட்சணம்; சசிகலா!

சசிகலா இன்றைய திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும் என்ற அவல நிலை இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது தான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்றைக்கு நடப்பதையெல்லாம் […]

Continue reading …