Home » Archives by category » தமிழகம் (Page 132)

மது போதையால் நிகழ்ந்த சோகம்!

Comments Off on மது போதையால் நிகழ்ந்த சோகம்!

மது போதையால் தன்னை பெற்ற தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரையும் வெட்டி கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூரை சேர்ந்த ஈஸ்வரன் (45), இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மகள் உள்ளார். திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பியவர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று இரவு மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 […]

Continue reading …

பயிர் காப்பீடு பிரீமியம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

Comments Off on பயிர் காப்பீடு பிரீமியம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில், “இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக […]

Continue reading …

உதயநிதி துவங்கிய இருசக்கர பேரணி!

Comments Off on உதயநிதி துவங்கிய இருசக்கர பேரணி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்-” என்று தெரிவித்துள்ளார். கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில், “மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKridersன் வாகனப் […]

Continue reading …

வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

Comments Off on வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

இன்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம், “சென்னையில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும்” என்று கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதியில் நிலவக்கூடும். […]

Continue reading …

பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

Comments Off on பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை விபரங்கள் குறித்து என பேட்டியளித்துள்ளார். அவரது பேட்டியில், “வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம். அவ்வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம், அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்று […]

Continue reading …

உதவி எண்கள் அறிவித்தது மாநகராட்சி!

Comments Off on உதவி எண்கள் அறிவித்தது மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி நேற்றிரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால், மழை நீர் தேங்குவது தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவிக்கும் போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாக் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட சேதங்களை சேதங்களை சரிப்படுத்த மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சி […]

Continue reading …

பேரிடர் மீட்பு படை: அமைச்சர் தகவல்!

Comments Off on பேரிடர் மீட்பு படை: அமைச்சர் தகவல்!

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “பருவமழையால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் 400 பேரிடர் மீட்பு படைக்குழு மற்றும் 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே அணைகளில் இருந்து […]

Continue reading …

இருசக்கரவாகனங்களில் சாகசம்; புகாரளிக்க இலவச எண்!

Comments Off on இருசக்கரவாகனங்களில் சாகசம்; புகாரளிக்க இலவச எண்!

பொதுஇடங்களில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதேபோல் அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்ததுதுறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் […]

Continue reading …

காவல்துறை விழிப்புணர்வு பேரணி!

Comments Off on காவல்துறை விழிப்புணர்வு பேரணி!

இளைய தலைமுறையினர் சமீபத்தில் போதைப் பொருட்களுக்கு அதிகமாக அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் வட மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தமிழ்நாடு முழுதும் விநியோகம் செய்யப்படுகிறது. இளைய சமுதாயத்தினர் இந்த போதை பொருட்கள் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக தமிழக அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை பல நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களும், இளைய சமுதாயத்தினரும் போதைப் பொருட்களின் தீங்கினை […]

Continue reading …

கணித ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்!

Comments Off on கணித ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள் என கணித ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பேசியபோது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்திய அரசுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி முதல் வாசிப்பு இயக்கம் வரை 50க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது, கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்புகளை கடன் […]

Continue reading …