Home » Archives by category » தமிழகம் (Page 135)

ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் பலி!

Comments Off on ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் பலி!

தமிழக மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதன் என்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஜார்கண்டிலுள்ள ஆர்ஐஎம்எஸ் என்ற மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவர் மதன் உடல் அவர் படித்து வந்த மருத்துவ கல்லூரி அருகிலேயே கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை […]

Continue reading …

பல நூறு மதிப்புடைய நிலங்கள் மீட்பு!

Comments Off on பல நூறு மதிப்புடைய நிலங்கள் மீட்பு!

ரூ.800 கோடி மதிப்பில் சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 4.5 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலமருகில் ஆக்கிரமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு ஆட்சியரரின் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்ரமிப்பு நிலத்தை மீட்டனர். 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இயங்கி வந்த அரசுடையை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூடம், வீடுகள் உள்ளிட்ட 30 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

இந்தியா நம் வசம் என முதலமைச்சர் பேச்சு!

Comments Off on இந்தியா நம் வசம் என முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது என தெரிவித்துள்ளார். இந்தியா என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன, அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இன்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. சிஏஜியால் ஊழல் […]

Continue reading …

சிலிண்டர் விலை உயர்வு!

Comments Off on சிலிண்டர் விலை உயர்வு!

மாதம் முதல் தேதியானால் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இன்றைய விலை உயர்வுக்கு பின், ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்தியது. இன்று மீண்டும் ரூ.101.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான […]

Continue reading …

அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மின் கட்டண குறைவு?

Comments Off on அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மின் கட்டண குறைவு?

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. அதன்படி அந்த அரசாணை இன்று முதல் அது அமலுக்கு வருகிறது. இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடு குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்சார கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது. அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டணம் […]

Continue reading …

கர்ப்பிணி பசுக்களை விஷம் வைத்து கொலை!

Comments Off on கர்ப்பிணி பசுக்களை விஷம் வைத்து கொலை!

கர்ப்பமாக இருந்த பசுமாடுகளை மதுரை மாவட்டத்தில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த பின்னியம்மாள் விவசாய கூலி தொழிலாளி. இவர் 3 பசுமாடுகளை வைத்து பால் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது இவரது 3 பசுமாடுகளும் கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது, இன்னும் சில தினங்களில் கன்றுகளை ஈன்றெடுக்கும் நிலையில் இருந்த இந்த பசுமாடுகளை நேற்று வழக்கம் போல தனது தோட்டத்து பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு […]

Continue reading …

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை!

Comments Off on பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை!

டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வரும் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதையடுத்து பல மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வகையில் அடுத்த கட்டமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என்றும் இது குறித்த விழாவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாம்பன் பாலத்தில் ஒரு பகுதியை […]

Continue reading …

வெங்காயம் விலை ஏற்றம்!

Comments Off on வெங்காயம் விலை ஏற்றம்!

தக்காளி விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனையானது. தற்போது தக்காளி விலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது தக்காளியை அடுத்து வெங்காயம் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 50 முதல் 70 ரூபாய் வரை வெங்காயம் விற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்று சதம் அடித்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ வெங்காயம் […]

Continue reading …

2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

Comments Off on 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!
2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், “தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி உண்டு. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் […]

Continue reading …

3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

Comments Off on 3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க இயலாது என கூறினர். எதோ எதிரி நாட்டு மோதுவது போல நினைக்கிறார்கள் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வினாடிக்கு 2600 கன அடி நீர் 15 நாட்களுக்குத் திறக்க காவிரி நீர் ஒழுக்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக துணைமுதலமைச்சர் டி.கே. சிவக்குமார் நேற்று, “நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால், கே.ஆர்.எஸ். கபினி அணைகளில் இருக்கும் தண்ணீர் எங்கள் குடிநீர் தேவைக்கே […]

Continue reading …