Home » Archives by category » தமிழகம் (Page 136)

ஆளுநர் குறித்து தமிழக அரசு குற்றச்சாட்டு..!

Comments Off on ஆளுநர் குறித்து தமிழக அரசு குற்றச்சாட்டு..!

பல்வேறு விஷயங்களில் செயலற்றவராக இருப்பதன் மூலம் மக்களின் உரிமைகளை ஆளுநர் பறித்து வருகிறார் என தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், நீட் விலக்கு மசோதா, சிறைக்கைதிகள் விடுதலை, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் உள்ளிட்டவற்றில் எந்த முடிவும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மேலும் முக்கியமான விவகாரங்களில் ஆளுநர் உடனுக்குடன் முடிவு எடுப்பதில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாக […]

Continue reading …

மருத்துவ இடங்களை நிரப்ப கலந்தாய்வு தேதி!

Comments Off on மருத்துவ இடங்களை நிரப்ப கலந்தாய்வு தேதி!

இன்று தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் நவம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் வரும் நவம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் எனவும், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் நவம்பர் 7 முதல் 15ம் தேதி வரை நடடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் tnmedicalselection.org […]

Continue reading …

மத்தியமைச்சரை டி.ஆர்.பாலு சந்திக்க என்ன காரணம்?

Comments Off on மத்தியமைச்சரை டி.ஆர்.பாலு சந்திக்க என்ன காரணம்?

திமுக எம்.பி., டி.ஆர்.பாலு இன்று டில்லியில் மத்தியமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தும், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு வழங்கினார். மேலும் மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்து மீனவர்களை இலங்கை […]

Continue reading …

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினை குறித்து விமர்சனம்

Comments Off on முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினை குறித்து விமர்சனம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “பொய் பேசுவதில் ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலின் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்” என பேசியுள்ளார். அவர் இதுகுறித்து பேசும்போது, “கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் வாய்க்கு வந்தபடி இஷ்டப்படி நூறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொய் பேசுகிறார். இது தமிழ்நாட்டின் மக்களின் காதில் […]

Continue reading …

நீதிமன்றம் சென்ற அமர்பிரசாத் ரெட்டி மனைவி!

Comments Off on நீதிமன்றம் சென்ற அமர்பிரசாத் ரெட்டி மனைவி!

அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி தனது கணவர் மீது குண்டர் சட்டம் பாய் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின் கீழ் […]

Continue reading …

சசிக்கலாவின் அதிரடி!

Comments Off on சசிக்கலாவின் அதிரடி!

சசிகலா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக வந்தபோது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பாஜக கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு: தேர்தல் சமயத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமா என்றால், எனக்கு அப்படி தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் காவலர்கள் […]

Continue reading …

பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!

Comments Off on பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!

பொன்.மாணிக்கவேல் “ஆட்சியாளர்கள் இந்து கோவிலுக்குள் வருவதில்லை, ஆனால் இந்து கோவில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார். சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும், முன்னாள் ஐ.ஜியுமான பொன்.மாணிக்கவேல் சென்றுள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர்சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர் உமாமகேஸ்வரிஅம்மன், சட்டநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர், திருநிலைநாயகி அம்மன் சுவாமி சந்நிதிகளில் […]

Continue reading …

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கருக்கா வினோத் முழக்கம்!

Comments Off on நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கருக்கா வினோத் முழக்கம்!

கருக்கா வினோத் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக ஆளுநர் ரவி தங்கி இருக்கும் கவர்னர் மாளிகைக்கு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசியதற்காக கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை செய்வதில் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவலர்கள் அவரை அழைத்து […]

Continue reading …

எடப்பாடியை விமர்சித்த முன்னாள் எம்.பி. !

Comments Off on எடப்பாடியை விமர்சித்த முன்னாள் எம்.பி. !

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக முதலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக கருத்துவேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து விலகியது. இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த னாளை முன்னிட்டு அதிமுக பொ., செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பாரத பிரதமர் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தன் வலைதள பக்கத்தில், “எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற […]

Continue reading …

இந்தியாவில் பிரபல டிவி விற்பனை நிறுத்தம்!

Comments Off on இந்தியாவில் பிரபல டிவி விற்பனை நிறுத்தம்!

இந்தியாவில் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்கள் இனி டிவி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளன. இதற்கான காரணத்தை இரு நிறுவனங்களும் குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்திய தொலைக்காட்சி சந்தையில் அதிகரித்து வரும் போட்டி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2019 மற்றும் 2020ல் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய நிறுவனங்கள் இந்திய தொலைக்காட்சி சந்தையில் நுழைந்தன. ஆனால் அவர்களால் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியவில்லை. இந்திய தொலைக்காட்சி சந்தையில் Samsung, LG மற்றும் […]

Continue reading …