Home » Archives by category » தமிழகம் (Page 138)

துர்கா ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Comments Off on துர்கா ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதுகுறித்து அவர் பேசும் போது, “சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும், எதிர்மறை பிரச்சாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட, நேர்மறை பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம், சாதி, மதங்களின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் கட்சியுடன் நாம் […]

Continue reading …

காட்டுமிராண்டிதனம் செய்யும் திமுக அண்ணாமலை சாடல்

Comments Off on காட்டுமிராண்டிதனம் செய்யும் திமுக அண்ணாமலை சாடல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாம¬லை தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் திமுக துடிப்பதாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதளத்தில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் […]

Continue reading …

பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்

Comments Off on பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்
பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்

தாம்பரம் காவல் ஆணையரகம் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அருகே மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பாஜகவினர் போராட்டம் செய்ததாகவும் கூறினார். மேலும் பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தனர் என்றும், இதனால் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. முன்னதாக பாஜகவின் […]

Continue reading …

உதயநிதி ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம்!

Comments Off on உதயநிதி ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம்!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்பதை குறிப்பதற்காக ஒரே ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோல் தற்போது உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து விளக்க பிரச்சாரத்தில் கையில் ஒரு முட்டையை வைத்துக்கொண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கையெழுத்து இயக்க தொடக்க விழாவில் நீட் பிஜி தேர்வில் முட்டை பர்செண்டேஜ் எடுத்தால் […]

Continue reading …

செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Comments Off on செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இம்மனு மீது விசாரணை நடந்த போது அமலாக்கத்துறை தரப்பில் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. […]

Continue reading …

கால் டாக்சி கட்டணங்கள் உயர்வு

Comments Off on கால் டாக்சி கட்டணங்கள் உயர்வு

ஓலா மற்றும் ஊபர் கால் டாக்சி கட்டணங்கள் தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. தமிழகத்தில் ஓலா மற்றும் ஊபர் கால் டாக்சிகள் பரவலாக இயங்கி வருகின்ற. இந்த ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும், இக்கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஆயிரக்கணக்கான வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையில் […]

Continue reading …

பல்கலையில் தரமற்ற உணவு!

Comments Off on பல்கலையில் தரமற்ற உணவு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி மதுரை கீழக்குயில் குடி பகுதியில் இயங்கி வருகிறது. இதில் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதால் மாணவிகள் உடல் உபாதைகளுக்கு உண்டு ஆளாவதாக குற்றச்சாட்டு. கடந்த ஒரு வாரமாக மாணவருக்கு காலை உணவாக வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவுகளுக்கு வழங்கப்படும் சாம்பாரில் புழுக்கள் இருப்பதால் மாணவிகள் காலை உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மாணவியர் விடுதி காப்பாளரிடம் மாணவிகள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவிகளுக்கு […]

Continue reading …

இஸ்ரேல் போர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Comments Off on இஸ்ரேல் போர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர் என்பதே கொடூரமானது, அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான் என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “கடந்த பத்து நாட்களாக காஸா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி […]

Continue reading …

மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!

Comments Off on மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் காலை பத்திரிகை படிக்க வேண்டும், தொடர்ந்து ஊடகங்களை பார்த்து வரவேண்டும் என கள ஆய்வில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “தினமும் பத்திரிகை படித்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது, உங்கள் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் காணும் செய்திகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும், அவ்வாறு தீர்வு காணப்பட்ட செய்திகளை ஊடகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை […]

Continue reading …

லியோ படத்தின் அனுமதி குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

Comments Off on லியோ படத்தின் அனுமதி குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் “லியோ” திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “லியோ.” இத்திரைப்படத்திற்கு மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகளே அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி காட்சிக்குதான் அனுமதி வழங்கப்பட்டது. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் “இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்ற மகிழ்ச்சியில் எல்லாரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டார்கள். விளையாட்டை விளையாட்டாக […]

Continue reading …