Home » Archives by category » தமிழகம் (Page 139)

தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

Comments Off on தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிகம் நீர்பாசனம் பெறும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்கிழக்கு பருவமழை பொழியும். இதில் அரபிக்கடலோர மாநிலங்கள் அதிக மழையை பெறுகின்றன. தவிரவும் காவிரி நதியில் நீர்வரத்து இந்நாளில் மழை அதிகரிக்கிறது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பொழியும் வ்டகிழக்கு பருவமழை டெல்டா பகுதிகள் நேரடி பாசன வசதி பெற உதவுகிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை அடுத்த […]

Continue reading …

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

Comments Off on தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

வரும் வாரத்தில் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து சரஸ்வதி பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் வருவதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் அதிகமாக செல்வார்கள் என்பதால் மெட்ரோ ரயில் சேவை […]

Continue reading …

மத்திய இணையமைச்சர் விஜய் படத்திற்கு பாராட்டு!

Comments Off on மத்திய இணையமைச்சர் விஜய் படத்திற்கு பாராட்டு!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வெளியான “லியோ” திரைப்படம் திமுகவின் தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் “லியோ” வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும் அடுத்த ஒரு வார காலத்திற்கு “லியோ” படத்தின் பெரும்பான்மை காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. “லியோ” படம் வெளியாகும் கடைசி தருணம் வரை பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு […]

Continue reading …

தாம்பரம்- விழுப்புரம் சிறப்பு புறநகர் ரயில்!

Comments Off on தாம்பரம்- விழுப்புரம் சிறப்பு புறநகர் ரயில்!

நாளை முதல் தாம்பரம் = விழுப்புரம் இடையே சிறப்பு புறநகர் ரயில் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – விழுப்புரம் – தாம்பரம் சிறப்பு புறநகர் ரயில் இதுவரை கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்றது. இந்த ரயில் கூடுதலான ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். பயணிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்த தென்னக ரயில்வே தற்போது […]

Continue reading …

பட்டாசு வெடி விபத்து உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

Comments Off on பட்டாசு வெடி விபத்து உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

நேற்று சிவகாசியில் இரண்டு இடங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரங்கபாளையம் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பட்டாசு கடை ஓனர் சுந்தரமூர்த்தி கனகராஜ் ராம்குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் […]

Continue reading …

தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள்!

Comments Off on தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள்!

வரும் 28ம் தேதி தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த அறிவிப்பை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தீபாவளிக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கேகே நகர் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகளுக்கான ரயில் முன்பதிவு முடிந்துவிட்டது.ரயிலில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் தீபாவளி […]

Continue reading …

பாஜக குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!

Comments Off on பாஜக குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!

திண்டுக்கல் சீனிவாசன் பாஜக சைத்தான் கூட்டணி என்றும் அக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து நாங்கள் வெளியேறியதில் 1000 மடங்கு மகிழ்ச்சியடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்த நிலையில் அதிமுக தொண்டர்கள் அதனை கொண்டாடினர். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வந்த பின்னர் தான் சிறுபான்மை அமைப்பின் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன், “பாஜக சைத்தான் கூட்டணி, அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியதால் மிகுந்த மகிழ்ச்சி […]

Continue reading …

வாரிசு அரசியல் பற்றி வானதி சீனிவாசன் கருத்து

Comments Off on வாரிசு அரசியல் பற்றி வானதி சீனிவாசன் கருத்து

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில் “தந்தை – மகன் – பேரன் – கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல். கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக, முதலமைச்சராக துரைமுருகன் போன்றவர்கள் வந்து, அந்த அமைச்சரவையில் ஸ்டாலின் ஓர் அமைச்சராக இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. ஆனால், இப்போது அப்படியா நடக்கிறது. உதயநிதியின் பேரனையும் ஏற்போம் என மூத்த […]

Continue reading …

சிவகாசியில் ஒரே இடத்தில் 2 வெடிவிபத்து!

Comments Off on சிவகாசியில் ஒரே இடத்தில் 2 வெடிவிபத்து!

இரண்டு இடங்களில் அடுத்தடுத்து சிவகாசி அருகே ஒரே இடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரெங்கபாளையம் மற்றும் கிச்சநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளில் நடந்த முடிவு விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகாசி பகுதியில் ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த வெடி […]

Continue reading …

மகளிர் உரிமைத்தொகைக்காக பெண்கள் சாலை மறியல்!

Comments Off on மகளிர் உரிமைத்தொகைக்காக பெண்கள் சாலை மறியல்!

கலைஞர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்ய சென்ற பெண்கள் கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதி தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1.63 […]

Continue reading …