Home » Archives by category » தமிழகம் (Page 154)

வைரமுத்துவின் ஆவேசம்!

Comments Off on வைரமுத்துவின் ஆவேசம்!

கவிஞர் வைரமுத்து, தமிழ் வானொலியில் இந்தியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் ஹிந்தியை குறைக்காவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் வானொலி நிலைய வாசலில் களமிறங்கி போராடுவோம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும், அகில இந்திய வானொலியின் தமிழ் நிலையங்கள் பல கலைஞர்கள் தமிழ் விளைத்த கழனிகளாகும்; கலைக்கும் அறிவுக்குமான ஒலி நூலகங்களாகும் அங்கே தமிழ் மொழி நிகழ்ச்சிகள் குறைந்து இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது மீன்கள் துள்ளிய குளத்தில் பாம்பு தலை தூக்குவது […]

Continue reading …

பாஜகவுக்கு எதிரான தீர்மானத்திற்கு திமுக உள்பட 26 கட்சிகள் ஆதரவு!

Comments Off on பாஜகவுக்கு எதிரான தீர்மானத்திற்கு திமுக உள்பட 26 கட்சிகள் ஆதரவு!

காங்கிரஸ் கட்சி மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இத்தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் 26 கட்சிகள் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வருகிறது. அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தரும் கோகையின் மகன் தருண் கோகெய் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச […]

Continue reading …

தக்காளி விலை மீண்டும் உயர்வு!

Comments Off on தக்காளி விலை மீண்டும் உயர்வு!

கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. 100 முதல் 150 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணமாக தக்காளி வரதுக்கு குறைந்துள்ளதுதான் தக்காளி விலை உயர்ந்ததுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் என விற்பனையாகி வந்தது. இன்று 10 ரூபாய் அதிகரித்து 110 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. தக்காளி […]

Continue reading …

மதுபானங்கள் விலை குறித்து அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்!

Comments Off on மதுபானங்கள் விலை குறித்து அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்!

அமைச்சர் முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபான விலை ஏற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டியளித்தபோது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக மதுபானம் விலை உள்பட அனைத்து விலைகளும் உயர்த்தப்பட உள்ளது. இந்த பக்கம் கொடுப்பது போல் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களிடமிருந்து அரசு பணத்தை வாங்கிக் கொள்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலையேற்றத்திற்கும் எவ்விதமான […]

Continue reading …

தமிழக அரசை கண்டிக்கும் அண்ணாமலை!

Comments Off on தமிழக அரசை கண்டிக்கும் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 2வது சுரங்கப் பணிகளுக்கான வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது குறித்து, நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் பிரசன்னகுமாரிடம் தொலைபேசி […]

Continue reading …

நெய்வேலி சுரங்கப்பணிக்கு தடைவிதிக்க டிடிவி கண்டனம்!

Comments Off on நெய்வேலி சுரங்கப்பணிக்கு தடைவிதிக்க டிடிவி கண்டனம்!

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட வயலில், பயிர்களை அழித்து பொக்லைன் […]

Continue reading …

செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது?

Comments Off on செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது?

இன்று சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது? என்பது குறித்த விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடைபெறவுள்ளது. இன்றைய விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு நடத்தவுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து அமலாக்கத்துறை காவலில் எடுக்கலாம் என இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என […]

Continue reading …

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது!

Comments Off on ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது!

இலங்கை கடற்படையினர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் பின்னர் விடுதலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது […]

Continue reading …

கர்நாடக துணை முதலமைச்சரின் உறுதி!

Comments Off on கர்நாடக துணை முதலமைச்சரின் உறுதி!

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீரை கண்டிப்பாக திறந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக மாநிலம் இன்னும் தரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து டில்லி சென்று அவர் மத்திய அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடக மாநிலத்திற்கு குடிநீர் தேவைக்கான நீரை வைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் […]

Continue reading …

அண்ணாமலையின் கோரிக்கை!

Comments Off on அண்ணாமலையின் கோரிக்கை!

பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரரின் உத்தரவான தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்பது போன்றே இதற்கான உத்தரவை தமிழகப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையில் வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020, குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பதையும் பள்ளிகளில் மாநில மொழிகளை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது. சிபிஎஸ்இயின் சமீபத்திய சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், உயர்நிலை வரை […]

Continue reading …