
இன்று முதல் தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னதாக அறிவித்தப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் அனைத்து மின் இணைப்புகளையும் ஆதார் எண்ணோடு இணைத்தல் வேண்டும் என்று கட்டாயமாக்கியது. அதன்படி பல கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன. இதற்கு பிறகு மின் கட்டண உயர்வு இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின் வாரியம் தெரிவித்திருந்தது. […]
Continue reading …
பூ வியாபாரம் செய்தவர் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ். நகர் 4வது வீதியில் வசிப்பவர் மணிகண்டனின் (36) மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். பவித்ரா மணிகண்டனுக்கு 2வது மனைவி ஆவார். இதேபோல் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 வதாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில், பவித்ரா நேற்று அவரது […]
Continue reading …
மத்திய அரசு ஏற்கனவே பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளது. இன்றுடன் பான் கார்டுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும் இன்று இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பான் எண் வாங்கியவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரி துறை தெரிவித்திருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அதற்கான காலக்கெடுக்கப்பட்ட நிலையில் பான் ஆதார் எண்களை […]
Continue reading …
நேற்றிரவு ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிரடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விளக்கத்தில், “கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு […]
Continue reading …
நேற்றிரவு திடீரென தமிழக ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திவுள்ளது. கவர்னரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு அமைச்சரை நீக்குவதற்கும் நியமனம் செய்வதற்கும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக […]
Continue reading …
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றினார். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக் (7 வயது), அந்த ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “மாமன்னன்” திரைப்படம் சுத்த ப்ளாப் படம் என்றும், அந்த படத்தை திமுகவினர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் சூப்பராக இருப்பதாக ஒரு சிலரும் சுமாராக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் படம் வெளியான முதல் நாள்: ரூபாய் ஆறு கோடி ரூபாய் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஜூலை 2ம் தேதி 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோயம்புத்தூர் கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பகுதி […]
Continue reading …
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக கவர்னர் டிஸ்மிஸ் செய்வதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்த விளக்கத்தில், […]
Continue reading …
பகுதி நேர பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறு அரசு கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நான்காண்டு பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் […]
Continue reading …