முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கிணைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். நான் இதுகுறித்து ஏற்கெனவே 20.10.2023 அன்று கடிதம் எழுதியிருந்ததேன். அதில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைத்து […]
Continue reading …காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில், இன்று (26.6) காலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், மாவட்டம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஹென்றி திபேன் சிறப்புரையாற்றினார்.
Continue reading …*முன்னாள் அதிமுக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் விடுதலை* *கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனுக்கு பாலியல் புகார் குறித்து நடந்து வந்த போஸ்கோ வழக்கில் இன்று விடுதலை என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.*
Continue reading …விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வரும் 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட […]
Continue reading …சிப்பி அரிக்கும் தொழிலாளர்களும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் இணைந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடலில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ஜோதி, அவரது தங்கை வாசுகி ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் அனைவரும் கடலில் புனித நீராடிய போது வாசுகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி கடலில் விழுந்து கடற்கரை மணலில் […]
Continue reading …நாளை கள்ளக்குறிச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக குழுவுடன் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு […]
Continue reading …பள்ளி மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கள்ளிக்குடி பகுதியில் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில், கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மதியம் உணவு இடைவேளையின் போது 12-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே தண்ணீர் குழாயில் டிபன் பாக்ஸ் கழுவும் போது , மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் […]
Continue reading …தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு உட்பட தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. […]
Continue reading …கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் சிகிச்சை பெற்று வருபவர்கள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று வரை கள்ளச்சாராயம் குடித்தவர்களின் மரணம் 52 என்று இருந்தது. இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாணசுந்தரம் உள்பட 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி […]
Continue reading …கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 140 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள், 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம். மேலும் அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு […]
Continue reading …