Home » Archives by category » தமிழகம் (Page 204)

கலெக்டர் அலுவலகத்தில் தீவிபத்து!

Comments Off on கலெக்டர் அலுவலகத்தில் தீவிபத்து!

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி உளள் சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மையம் கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது. இன்று காலை திடீரென அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி கடைசியாக […]

Continue reading …

அதிமுகவின் வேட்பாளர் குறித்து அண்ணாமலை பதில்!

Comments Off on அதிமுகவின் வேட்பாளர் குறித்து அண்ணாமலை பதில்!
அதிமுகவின் வேட்பாளர் குறித்து அண்ணாமலை பதில்!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து பதிலளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே முரண்பாடுகள் நிலவி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் […]

Continue reading …

இன்னொரு பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Comments Off on இன்னொரு பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் ஓபிஎஸ்ஐ வரவழைத்து இன்னொரு பொது குழு கூட்டி, அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்யலாம் என அதிமுக பொது குழு வழக்கில் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று நீதிமன்றத்தில் அதிமுக பொது குழு விசாரணை நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் வாதாடி வருகின்றனர். இந்த வாதத்திற்கு பின்னர் ஓபிஎஸ் தரப்பினர் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை […]

Continue reading …

புதிதாக கட்சி ஆரம்பித்த பிரபலம்!

Comments Off on புதிதாக கட்சி ஆரம்பித்த பிரபலம்!

பல கட்சிகளிலும் மாறி மாறி இருந்த பழ.கருப்பையா தற்போது புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழ கருப்பையா தற்போது புது கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். இன்று அக்கட்சிக்கு தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்று பெயரிட்டுள்ளார். தனது கட்சிக்கான முதல் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கொள்கை நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம். கட்சியின் […]

Continue reading …

அமைச்சர் சிவசங்கர் தகவல்!

Comments Off on அமைச்சர் சிவசங்கர் தகவல்!

அமைச்சர் சிவசங்கர் அனைத்து பேருந்துகளிலும் ஜீபிஎஸ் கருவி பொருத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னை பஸ் செயலி மூலம் பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. பேருந்து இருப்பிட விவரத்தை செயலி மூலமாக பயணிகள் அறிந்து கொள்ளவும் பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் இந்த வசதி உதவும். இந்த செயலி மூலம் […]

Continue reading …

ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

Comments Off on ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

ஓபிஎஸ் தன்னிடம் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் அவருக்காக கையெழுத்து போடுவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஓபிஎஸ் தனியாக வேட்பாளரை நிறுத்தி இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்திடுவேன் என்றும் இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக மக்களும் […]

Continue reading …

பிப்ரவரி 1 முதல் கனமழை!

Comments Off on பிப்ரவரி 1 முதல் கனமழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வுதான் இதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமாரி திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Continue reading …

திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது!

Comments Off on திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது!

வட இந்திய இளைஞர்கள் திருப்பூரில் தமிழக இளைஞர்களை தாக்கியதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானது. இச்சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்புர் அனுப்பபாளையம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர்களை பீகாரரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தாக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. தற்போது பீகாரை சேர்ந்த ராஜத்குமார், பரேஷ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக […]

Continue reading …

அண்ணாமலை அறிவுறுத்தல்!

Comments Off on அண்ணாமலை அறிவுறுத்தல்!
அண்ணாமலை அறிவுறுத்தல்!

பாஜக தொண்டர்கள் தன்னை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் சர்ச்சைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த சில காலமாகவே பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை விஷயங்கள் தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி சர்ச்சையானது. அதை தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்த காய்த்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சமீபமாக பாஜக முன்னாள் பிரமுகர்கள், மாற்று கட்சியினரால் பாஜக தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதற்கு பாஜக தொண்டர்கள் பலரும் கமெண்ட் செய்வதால் […]

Continue reading …

அன்புமணி ராமதாஸின் கருத்து!

Comments Off on அன்புமணி ராமதாஸின் கருத்து!
அன்புமணி ராமதாஸின் கருத்து!

பள்ளிகளைச் சுற்றி புகைப்பது அதிகரித்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தர்மபுரி எம்பியும், பாமக தலைவருமான அன்புமணி ராமதஸ் தனது டுவிட்டரில், “சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் கவலையளிக்கிறது! ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத்தான் நான் […]

Continue reading …